July 5, 2026

சவுதி அரேபியாவின் நிதியுதவியுடன் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடம் திறந்து வைக்கப்பட்டது.

சப்ரகமுவ பல்கலைக்கழக புதிய மருத்துவபீட வளாகம் மாணவர் பயன்பாட்டிற்கு 04.07.2026 கையளிப்பு நாட்டுமக்களுக்கு உயர்ந்த தரத்திலான சுகாதார சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தேசிய இலக்கின் ஒரு முக்கிய மைல்கல்லாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய மருத்துவபீட வளாகத்தைக் குறிப்பிடலாம் என, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்தோடு, மருத்துவக் கல்வி முறையின் தரத்தை மேம்படுத்துவதன் மூலமாக, மாற்றம் பெற்று வரும் சமூகத் தேவைகளையும் உலகளாவிய சுகாதாரப் […]

சவுதி அரேபியாவின் நிதியுதவியுடன் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடம் திறந்து வைக்கப்பட்டது. Read More »

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆர்.ஜே.மீடியா ஊடக வலையமைப்பின் 6ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பிரமாண்ட கௌரவிப்பு நிகழ்வு!

“முயற்சிக்கு என்றும் முதலிடம்” என்ற தாரக மந்திரத்துடன் கடந்த ஆறு வருடங்களாக ஊடகத்துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் ‘ஆர்.ஜே.மீடியா’ (RJ Media) ஊடக வலையமைப்பின் 6ஆம் ஆண்டு பூர்த்தி விழாவும், சாதனையாளர்களைக் கௌரவிக்கும் பிரமாண்ட நிகழ்வும் நேற்று (04.07.2026) சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) மிக விமர்சையாக நடைபெற்றது. ஆர்.ஜே.மீடியா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஏ.எம்.இன்ஷாப் தலைமையில் நடைபெற்ற இந்நாட்டளாவிய ரீதியிலான விழாவில், கலை, கல்வி, ஊடகம் மற்றும் வணிகத் துறைகளைச்

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆர்.ஜே.மீடியா ஊடக வலையமைப்பின் 6ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பிரமாண்ட கௌரவிப்பு நிகழ்வு! Read More »

மூன்று தசாப்த கால அர்ப்பணிப்புக்குக் கிடைத்த மகுடம்: சிரேஷ்ட ஊடகவியலாளர் கியாஸ் ஷாபிக்கு ‘கோணா தொட்ட’ வாழ்நாள் சாதனையாளர் விருது!

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகத்துறையில் ஆற்றிய ஒப்பற்ற மக்கள் சேவையினைப் பாராட்டி, சிரேஷ்ட ஊடகவியலாளரும் ‘Trinco Plus’ செய்தி ஆசிரியருமான கியாஸ் ஷாபி அவர்களுக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் மிக உயரிய ‘கோணா தொட்ட’ ஊடக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பத்திரிகைப் பேரவையில் (Sri Lanka Press Institute) பதிவு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், கடந்த சனிக்கிழமை (04.07.2026) நடைபெற்ற விசேட

மூன்று தசாப்த கால அர்ப்பணிப்புக்குக் கிடைத்த மகுடம்: சிரேஷ்ட ஊடகவியலாளர் கியாஸ் ஷாபிக்கு ‘கோணா தொட்ட’ வாழ்நாள் சாதனையாளர் விருது! Read More »

ஹெட்போன் (Headphones) அல்லது இயர்போன் (Earphones) அணிந்து, இசையைக் கேட்டுக்கொண்டே வீதிகளில் செல்லும் பாதசாரிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறான சாதனங்களை அணிந்து இசையைக் கேட்டுக்கொண்டு வீதிகளில் செல்வதால், பாதசாரிகள் விபத்துகளுக்கு உள்ளாகும் போக்கு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாறானவர்களுக்கு தற்போது எச்சரிக்கைகள் மட்டுமே விடுக்கப்படுவதாகவும், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். வீதி விபத்துகளால் நாளொன்றுக்கு 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதுடன், 2026-ஆம் ஆண்டு ஜனவரி 01 முதல் ஜூன் 30 வரை இடம்பெற்ற 1,323 வீதி விபத்துகளில் 1,389 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். 2025-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு விபத்துகளின்

ஹெட்போன் (Headphones) அல்லது இயர்போன் (Earphones) அணிந்து, இசையைக் கேட்டுக்கொண்டே வீதிகளில் செல்லும் பாதசாரிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் Read More »

டெங்கு ஒழிப்பு: பொதுமக்களின் முறைப்பாடுகளுக்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

மேல் மாகாணத்தில் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், பொதுமக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் மற்றும் அதற்கு சாதகமான சூழல்கள் குறித்து பொதுமக்கள் பின்வரும் இலக்கத்திற்கு தொடர்புகொண்டு முறைப்பாடுகளை வழங்க முடியும் என ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்களது பகுதிகளில் காணப்படும் டெங்கு அபாயங்கள் குறித்த தகவல்களை இந்த இலக்கத்தின் ஊடாக

டெங்கு ஒழிப்பு: பொதுமக்களின் முறைப்பாடுகளுக்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்! Read More »

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கிடுகிடு உயர்வு!

உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (05) கணிசமான அளவில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளன. இதன்படி, உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய புதிய விலை விபரங்கள் பின்வருமாறு: அவுண்ஸ் கணக்கில் புதிய விலைகள்: மத்திய வங்கிகளின் கொள்முதல் அதிகரிப்பு மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்கள் காரணமாகவே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றம் உள்நாட்டு

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கிடுகிடு உயர்வு! Read More »

நிலக்கரி கொள்முதல் முறைகேடு: நாளை முதல் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சிப்பதிவு ஆரம்பம்! முதலாவதாக அமைச்சின் செயலாளர் அழைப்பு

சர்ச்சைக்குரிய நிலக்கரி கொள்முதல் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, நாளை திங்கட்கிழமை (06) காலை முதல் தனது சாட்சியப் பதிவுப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளது. இந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் முதலாவதாகச் சாட்சியமளிப்பதற்காக, தற்போதைய எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஜி. எம். ஆர். டி. அபோன்சோ அழைக்கப்பட்டுள்ளார். செயலாளரின் சாட்சியப் பதிவைத் தொடர்ந்து அடுத்தகட்டமாகப் பின்வரும் தரப்பினரும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்: சாதாரண நடைமுறைகளின்படி, ஆணைக்குழு முதற்கட்டமாக சாட்சிகளிடமிருந்து சாட்சியங்களை

நிலக்கரி கொள்முதல் முறைகேடு: நாளை முதல் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சிப்பதிவு ஆரம்பம்! முதலாவதாக அமைச்சின் செயலாளர் அழைப்பு Read More »

காட்டுப்பாதை 10 இல் திறக்கப்படும்!

இம்முறை யாத்திரை நடைமுறை இறுக்கமாக இருக்கும் – மொனராகலை அரச அதிபர் நிஷாந்தஇதுவரை கதிர்காமத்தில் இரு கூட்டங்களை நடாத்தியுள்ளோம். காட்டுப்பாதை 10 இல் திறக்கப்படும். 24ஆ ம் திகதி பூட்டப்படும். அங்குபொலித்தீன் பிளாஸ்டிக் முற்றாகவே தடைசெய்யப்படும் என்று மொனராகலை அரச அதிபர் ஏஜி.நிஷாந்த தெரிவித்துள்ளார்கதிர்காமம் பாதயாத்திரை தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்.. இம்முறை பாதயாத்திரை சட்டதிட்டங்கள் மிகவும் இறுக்கமாக இருக்கும். மீறினால் நீதிமன்றத்தில் நிற்க வேண்டி ஏற்படும்.வடக்கில் இருந்து பாதயாத்திரை வரும் அடியார்கள் உகந்தயிலிருந்து

காட்டுப்பாதை 10 இல் திறக்கப்படும்! Read More »

சிறுபோக நெல் கொள்வனவு: விவசாயிகளுக்காக 6 பில்லியன் ரூபாயை ஒதுக்கியது அரசாங்கம்!

விவசாயிகளிடமிருந்து தற்போதைய சிறுபோக நெல் அறுவடையைக் கொள்வனவு செய்வதற்காக, அரசாங்கம் 6 பில்லியன் ரூபாய் (600 கோடி) நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் மாவட்ட செயலர்கள் ஊடாக இந்த நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தை முறையான வகையில் முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நியாயமான விலை: தற்போதைய சிறுபோக அறுவடை சந்தைக்கு வரத் தொடங்கியுள்ள நிலையில், இடைத்தரகர்களின் சுரண்டல்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாத்து, அவர்களுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த நிதி உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளது.

சிறுபோக நெல் கொள்வனவு: விவசாயிகளுக்காக 6 பில்லியன் ரூபாயை ஒதுக்கியது அரசாங்கம்! Read More »

மன்னாரில் கொடூரம்: முச்சக்கர வண்டியில் தலைகீழாகக் கட்டி கடத்தப்பட்ட கன்றுகள் மீட்பு!

மன்னார், தாரபுரம் பிரதான வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் மிகக் கொடூரமான முறையில் கடத்தப்பட்ட இரண்டு கன்றுகளை மன்னார் பொலிஸார் நேற்று அதிரடியாக மீட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றை மறித்து பொலிஸார் சோதனை இட்டபோதே இந்த கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. மன்னார் பகுதியில் திருடப்பட்ட இந்தக் கன்றுகள், முச்சக்கர வண்டியின் பயணிகள் அமரும் சிறிய பகுதிக்குள் திணிக்கப்பட்டு, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கடத்தப்பட்டுள்ளன. இரக்கமற்ற முறையில் வெறும்

மன்னாரில் கொடூரம்: முச்சக்கர வண்டியில் தலைகீழாகக் கட்டி கடத்தப்பட்ட கன்றுகள் மீட்பு! Read More »