வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம எசல பெரஹரா உற்சவம்: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்று வழிபாடு!
கதிர்காமம்: வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான எசல பெரஹரா உற்சவத்தின் இறுதி மகா ஊர்வலம் நேற்றைய தினம் (29) வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். முன்னதாக வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிவெஹர ராஜமகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, ருஹுணு மகம்பத்துவின் தலைமைச் சங்கநாயக்கரும் கிரிவெஹர ராஜமகா விகாரையின் விகாராதிபதியுமான வணக்கத்திற்குரிய கோபாவக்க தம்மின்த தேரரைச் சந்தித்து ஆசிகளையும் பெற்றுக் கொண்டார். கிரிவெஹர விகாரை […]










