Filter posts by category

அரசியல்

ஆறு கட்சி கூட்டை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் -ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார்

கனகராஜா சரவணன் ஆறு கட்சிகள் கூட்டு வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் மக்களின் இருப்பை கேள்விக் குறியாக்கும் எனவே தமிழரசு கட்சியின் உடைய இந்த திட்டங்களை தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும் காலம் காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் இந்த பிழைப்பை இத்தோடு நிறுத்திவிட்டு அரசியல் செய்ய முடியாவிட்டால் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு ஒதுங்கி செல்லவும் என ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார். மட்டக்களப்பு பாலைமீன் மடுவில் […]

ஆறு கட்சி கூட்டை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் -ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் Read More »

தமிழரசின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் –ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன்-

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதன் அவருக்கு நினைவு தூபி அமைப்பதாக இருந்தால் அவர்களது சொந்த இடத்தில் அமைக்க வேண்டும் பொது இடத்தில் அமைக்க கூடாது கிழக்கு மண்ணில் சிலை அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது என ஈழத் தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்தார். ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) ஊடக அறிக்கை ஒன்றை

தமிழரசின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் –ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன்- Read More »

மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம் ஆராய்கிறது -பிரதியமைச்சர் அருண் ஹேமச் சந்திரா

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில், வெளிநாடுகளில் பணிபுரியும் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு (11) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 114 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்த  மற்றும்  பல்கலைக்கழகத்துக்கு

மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம் ஆராய்கிறது -பிரதியமைச்சர் அருண் ஹேமச் சந்திரா Read More »

அரசாங்கம் அனைத்து தரப்பினரையும் ஏமாற்றியுள்ளது – திலித் குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம் தொழில்முனைவோர் உட்பட தங்களை ஆட்சிக்குக் கொண்டு வந்த அனைத்து தரப்பினரையும் ஏமாற்றியுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். ‘தைரியமான மனிதர்களை உருவாக்குவோம் – தொழில்முனைவோருக்கு கைகொடுப்போம்’ என்ற தலைப்பில் இன்று (05) கோட்டேயில் நடைபெற்ற தொழில்முனைவோர் மற்றும் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த திலித் ஜயவீர, “இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள், இதன் மீது பெரும்

அரசாங்கம் அனைத்து தரப்பினரையும் ஏமாற்றியுள்ளது – திலித் குற்றச்சாட்டு Read More »

சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ச அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே – பா.உ பிரபு.

சஜித் பிரேமதாசாவாக இருந்தாலும்சரி ரணில் விக்கிரமசிங்கமாக இருந்தாலும்சரி, அல்லது மஹிந்த ராஜபக்சவாக இருந்தாலும், அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகவே தான் காணப்படுகின்றார்கள் அவர்களுடைய இனவாத செயற்பாடுகள்தான் பிரதான கொள்கையாக இருந்து கொண்டிருக்கின்றது. என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமனற உறுப்பினரும், பிரதே அபிவிருத்திக்குழுத் தலைவரும் சுகாதார அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். இன்றயத்தினம் சனிக்கிழமை(04.06.2026) களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து அங்குள்ள குறை நிறைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ச அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே – பா.உ பிரபு. Read More »

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜயை சந்தித்துப் பேசினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (03) நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் முக்கிய அம்சங்கள்: தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், ஈழத் தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் அவரைத் தலைமைச் செயலகத்தில் சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜயை சந்தித்துப் பேசினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்! Read More »

எம்பி அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்யக்கோரும் மனு: விசாரணை ஓகஸ்ட் 31ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா இராமநாதனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள விசேட பேராணை மனு மீதான விசாரணையை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ‘அபினவ நிவஹல் பெரமுன’ அமைப்பின் தலைவர் ஓஷல ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த மனு, நேற்று (ஜூலை 02) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மஹேன் கோபல்லவ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான விசேட சட்டத்தரணி

எம்பி அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்யக்கோரும் மனு: விசாரணை ஓகஸ்ட் 31ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு! Read More »

சொத்து, கடன் விபரங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்றுடன் நிறைவு

சொத்து மற்றும் கடன் விபரக் கூற்றுக்களை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் இன்றுடன் (30) நிறைவடைவதாக இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை சொத்து மற்றும் கடன் விபரங்களை சமர்ப்பிக்காத அதிகாரிகள் இன்றைய தினத்திற்குள் அதனைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக, சொத்து மற்றும் கடன் விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அனைத்து அதிகாரிகளும் இணையவழி (Online) ஊடாகவே தங்களது விபரக்

சொத்து, கடன் விபரங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்றுடன் நிறைவு Read More »

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மறைமுக ஏகாதிபத்தியத்தையும் தோற்கடிக்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பண்டைய மன்னராட்சிக் காலத்தில் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக மன்னர்களும் அமைச்சர்களும் உன்னத சேவைகளை ஆற்றினர். நாட்டுக்கு பல்வேறு ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்ட சமயங்களில் அவர்கள் நாட்டைக் காப்பதற்காக தமது உயிரைப் பணயம் வைத்து சிறந்த சேவையாற்றினர். இன்றைய உலகில் நிலவும் உலகளாவிய புவிசார் அரசியல் பிரச்சினைகள் காரணமாக, இந்தியப் பெருங்கடல் அமைதி வலயமாவதற்குப் பதிலாகப் போர் அபாயத்திற்கு ஆளாகி காணப்படுகின்றது. அமைதி வலயமாய் இருந்த இந்தியப் பெருங்கடல் ஒரு கட்டத்தில் போரின்

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மறைமுக ஏகாதிபத்தியத்தையும் தோற்கடிக்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச Read More »

கிழக்கை மட்டும் குறிவைப்பதா? “காணி விவகார விசேட பொறிமுறையை உடனே ரத்து செய்க!” – ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு ‘நீதிக்கான மய்யம்’ அவசரக் கடிதம்!

கிழக்கு மாகாணத்தில் காணி விவகாரங்களைக் கையாள்வதற்காக விசேட குழு ஒன்றையும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) தலைமையிலான “முழு அதிகாரம்” கொண்ட விசேட பொலிஸ் பிரிவொன்றையும் அமைப்பதற்கு கடந்த 22 ஆம் திகதி அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு அல்லது இடைநிறுத்துமாறு கோரி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ‘இலங்கை நீதிக்கான மய்யம்’ (Center for Justice in Sri Lanka) அமைப்பு மிக

கிழக்கை மட்டும் குறிவைப்பதா? “காணி விவகார விசேட பொறிமுறையை உடனே ரத்து செய்க!” – ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு ‘நீதிக்கான மய்யம்’ அவசரக் கடிதம்! Read More »