Filter posts by category

கல்வி

உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் புதிய அதிபர் பதவியேற்பு..!

(ஹஸ்பர் ஏ.எச் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் புதிய அதிபராக  சோமசுந்தரம் கங்கேஸ்வரன் (SLPS-I) அவர்கள் புதன்கிழமை ( 09.09.2026 ) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டார். இவர் முன்னதாக குப்புறுப்பிட்டி மெதடிஸ்ட் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபராகவும், குச்சவெளி கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். கடந்த ஒரு வருட காலமாக கல்லூரியின் பதில் அதிபராகக் கடமையாற்றிய திருமதி. தமிழரசி விஷ்ணுக்குமார் அவர்களிடமிருந்து புதிய அதிபர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.  அவருடைய அர்ப்பணிப்பான சேவையைப்

உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் புதிய அதிபர் பதவியேற்பு..! Read More »

சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டம் மூலம் மாணவர்கள் கௌரவிப்பு

ஹஸ்பர் ஏ.எச்- சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தின் மூலம் தரம் 05புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் பணப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். தம்பலாகாமம் பிரதேச செயலகம் ஊடாக, தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன்  தலைமையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வொன்றில், தம்பலகாமம் பிரதேசத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு நிதியுதவி மற்றும் குறித்த கௌரவம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு (07.09.2026) மாலை தம்பலகாமம் பிரதேச

சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டம் மூலம் மாணவர்கள் கௌரவிப்பு Read More »

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாக நிறைவடைந்தது ‘FIASTA’26’ கண்காட்சி!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ‘தொப்பிகல’ வளாகத்தில் (Thoppigale Premises) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘FIASTA’26 – Grand Stall Exhibition’ கண்காட்சி நேற்று (23) மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. நேற்று காலை 9:00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்ற இக்கண்காட்சியில், பலதரப்பட்ட உணவு அரங்குகள், கலை மற்றும் கலாச்சாரக் கண்காட்சிகள், சுவாரஸ்யமான பொழுதுபோக்கு விளையாட்டுகள் மற்றும் மாணவர்களின் விசேட கைவினைப் பொருட்கள் அடங்கிய பல வித்தியாசமான கண்காட்சி மூடீடுகள் (Stall-கள்) பார்வையாளர்களைக் கவர்ந்தன. இவ்விழாவில் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமன்றி, பொதுமக்கள்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாக நிறைவடைந்தது ‘FIASTA’26’ கண்காட்சி! Read More »

சமூக குற்றங்களைக் குறைக்கும் ஒரே வழி ‘அறநெறிக் கல்வி’:

பிரதியமைச்சர் பிரதீப் தெரிவிப்பு! ஒவ்வொருவரினதும் ஊர்களிலும் அறநெறி பாடசாலைகள் ஆரம்பிக்கின்ற பொழுது, சிறைக்கூடத்திற்கு செல்கின்ற கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், நமது பிள்ளைகள் நல்ல ஒழுக்கமுள்ள மனிதனாக உருவாகுவதற்கு அறநெறி பாடசாலைகளின் பங்களிப்பு அளப்பறியது என்றார். இந்து சமய அறநெறி மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் நிகழ்வு- 2025 நிகழ்வு (2026.08.16) வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இதில்பிரதம

சமூக குற்றங்களைக் குறைக்கும் ஒரே வழி ‘அறநெறிக் கல்வி’: Read More »

திருகோணமலையில் பாடசாலை மாணவர்களுக்கான கல்விக்கான உதவி தொகை வழங்கி வைப்பு ..!

(ஹஸ்பர் ஏ ஹலீம் – திருகோணமலையில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விக்கான உதவிதொகை பெரெண்டினா நிறுவனம் ஊடாக வழங்கி வைக்கப்பட்டன.  குறித்த நிகழ்வு திருகோணமலை குளக்கோட்டன்  மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (14) மாலை இடம் பெற்றது. பெரெண்டினாவின் கல்வி ஆதரவு திட்டங்களில் ஒன்றாக, ஆண்டுதோறும் குறைந்த வருமானம் கொண்ட பெரெண்டினா பயனாளிகளின் குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு Bright Students Scholarship திட்டத்தின் மூலம் உதவி வழங்கி வருகின்றது.  இந்த உதவித்தொகை கல்வித் தராதர உயர்தர

திருகோணமலையில் பாடசாலை மாணவர்களுக்கான கல்விக்கான உதவி தொகை வழங்கி வைப்பு ..! Read More »

மட்.ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரிக்கான புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா

கல்வி அமைச்சினால் கற்றல் செயல்பாடுகளை வினைத்திறனுடையதாக முன்னெடுக்கும் வகையில் தொடர்ச்சியாக அபிவிருத்தி பணிகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கல்வி வலையத்திற்கு உட்பட்ட ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் கனிஷ்ட பிரிவு மாணவர்களுக்கு 2 மில்லியன் ரூபா செலவில்  புதிய கற்பித்தல் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு கல்லூரியின் அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை(14.08.2026)  காலை விசேட  இறைவழிபாடுகளின் பின்பு இடம்பெற்றது இந்நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி நீலமாதவானந்தாஜி, மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.ரவி, மற்றும் மாநகர  சபை உறுப்பினர் ஆ.துதிஷ்கரன், வலயக் கல்வி அலுவலகத்தின் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விச் சமூகத்தினர் என பலர் கலந்து  கொண்டு அடிக்கலினை நாட்டி வைத்தனர்.

மட்.ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரிக்கான புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா Read More »

சீரற்ற வானிலையையும் பொருட்படுத்தாது க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு ஆர்வத்துடன் சமூகமளித்த ஹட்டன் மாணவர்கள்!

நாடு முழுவதும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (10) வெற்றிகரமாக ஆரம்பமானது. இன்றைய தினத்திலிருந்து ஒரு மாத காலத்திற்கு இப் பரீட்சைகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன. ஹட்டன் கல்வி வலயம் மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் இன்று காலையில் கடுமையான சீரற்ற வானிலை நிலவிய போதிலும், மாணவர்கள் அதைப் பொருட்படுத்தாது மிகுந்த ஆர்வத்துடன் அதிகாலையிலேயே பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது. இயற்கை விடுத்த சவால்களுக்கு மத்தியிலும், தமது பிரகாசமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும்

சீரற்ற வானிலையையும் பொருட்படுத்தாது க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு ஆர்வத்துடன் சமூகமளித்த ஹட்டன் மாணவர்கள்! Read More »

பல்கலைக்கழக அனுமதிக்கான Z – Score வெட்டுப்புள்ளிகள் வெளியீடு 2025/2026 கல்வியாண்டு!

கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான அரசு பல்கலைக்கழக அனுமதிக்கான குறைந்தபட்ச இசட்-புள்ளி (Z-Score Cut-off Marks) வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கான பல்கலைக்கழகம் மற்றும் பாடநெறிகளுக்கான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ugc.ac.lk வாயிலாக பார்வையிட முடியும்.

பல்கலைக்கழக அனுமதிக்கான Z – Score வெட்டுப்புள்ளிகள் வெளியீடு 2025/2026 கல்வியாண்டு! Read More »

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18 ஆவது பட்டமளிப்பு விழா நிறைவு- 3,398 பேருக்கு பட்டங்கள் வழங்கிக் கௌரவம்

பாறுக் ஷிஹான்தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா  ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் தொடர்ச்சியாக 3 நாட்கள் (25, 26, 27) 09 அமர்வுகளாக நடைபெற்று வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இப் பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 3,398 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றுக்கொண்டதாக பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஜே. நௌபர் தெரிவித்தார். பல்கலைக்கழக வேந்தரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி பாயிஸ் முஸ்தபா தலைமையில் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன. பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜனைடீன் கலந்துகொண்டதுடன்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18 ஆவது பட்டமளிப்பு விழா நிறைவு- 3,398 பேருக்கு பட்டங்கள் வழங்கிக் கௌரவம் Read More »

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா- 2ஆவது நாள் அமர்வு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் 2ஆவது நாள் அமர்வு ஞாயிற்றுக்கிழமை (26) ஒலுவில் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (ஜூலை 25) ஒலுவிலிலுள்ள பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும் இப்பட்டமளிப்பு விழா நாளை திங்கட்கிழமை (27) நிறைவடையும். 3,398 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்ஒன்பது தனித்தனி அமர்வுகளாக (Sessions) நடைபெறவுள்ள இவ்விழாவில், பல்கலைக்கழகத்தின்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா- 2ஆவது நாள் அமர்வு Read More »