பொத்துவில் பசறிச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்: ஊராரை விரட்டியதால் வீதிக்கு வந்த மக்கள்!
இளைஞர்களின் துணிச்சலான முயற்சியால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது; இரவு நேரங்களில் அவதானமாக இருக்குமாறு கிராமவாசிகளுக்கு வேண்டுகோள்! பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் பொத்துவில் பசறிச்சேனை கிராமத்திற்குள் நேற்றிரவு புகுந்த காட்டு யானை ஒன்று, அதை விரட்ட முயன்ற கிராம மக்களைத் திரும்பத் துரத்தியதால் பகுதியில் பெரும் பரப்பரப்பும் அச்சமும் நிலவியது. கிராமத்திற்குள் புகுந்து முழுமையாகச் சுற்றித் திரிந்த காட்டு யானையை ஊரார் ஒன்றுதிரண்டு வெளியேற்ற முயன்றபோது, யானை கோபமடைந்து துரத்த முற்பட்டதால் பொதுமக்கள் நாலாப்பக்கமும் தெறித்து ஓடினர். எனினும், […]










