சமூக ஊடகப் பதிவு விவகாரம்: சவுதியில் கைதான இலங்கையர் அனோஜனுக்கு மரண தண்டனை? – வெளியானது அதிர்ச்சித் தீர்ப்பு!
சமூக ஊடகத்தில் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்துத் தவறான கருத்தைப் பதிவிட்டதாகக் கூறி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அனோஜன் என்பவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, வழக்கின் முதற்கட்ட விசாரணைகளின் முடிவில் அனோஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து அனோஜன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் மீதான இறுதித் தீர்ப்பு நேற்று மாலை வழங்கப்பட்டுள்ளது. இதன்போதே










