July 13, 2026

கிழக்கு மாகாண கரம் சுற்றுப்போட்டி: மாவிலங்குதுறை விக்கினேஸ்வரா வித்தியாலய பெண்கள் அணி மாகாண மட்டத்தில் சாம்பியன்!

2026ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான கிழக்கு மாகாண மட்ட கரம் (Carrom) சுற்றுப்போட்டியில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மட் / மாவிலங்குதுறை விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி மாகாண சாம்பியனாகத் தெரிவாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. மாகாணத்தின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த வலுவான அணிகளை எதிர்கொண்டு, திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய மாவிலங்குதுறை விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவிகள் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டனர். இந்த மாகாண மட்ட வெற்றியைத் தொடர்ந்து, இவ்வணி அடுத்து நடைபெறவுள்ள தேசிய […]

கிழக்கு மாகாண கரம் சுற்றுப்போட்டி: மாவிலங்குதுறை விக்கினேஸ்வரா வித்தியாலய பெண்கள் அணி மாகாண மட்டத்தில் சாம்பியன்! Read More »

கிண்ணியாவில் சோகம்: மணல் கடத்தல்காரர்களைக் கைது செய்யச் சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட STF வீரர் சடலமாக மீட்பு!

கிண்ணியா பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, மகாவலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான விசேட அதிரடிப்படை (STF) வீரர் இன்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த அதிகாரி பத்தரமுல்ல, ஜயவத்தனகம பகுதியைச் சேர்ந்த சூரியபுர விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றி வந்த 39 வயதுடைய பொலிஸ் சார்ஜன் சாந்த கிஹான் ரணசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று (ஜூலை 13) அதிகாலை வேளையில், கிண்ணியா முடுக்குத்தெட்டி மற்றும் மணலாறு துறையினூடாக

கிண்ணியாவில் சோகம்: மணல் கடத்தல்காரர்களைக் கைது செய்யச் சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட STF வீரர் சடலமாக மீட்பு! Read More »

டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி: ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் விசேட ஒழிப்புச் செயற்றிட்டம் ஆரம்பம்!

நாட்டில் தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தலில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) ஏற்பாட்டில் சமூக மட்டத்திலான விழிப்புணர்வு மற்றும் ஒழிப்புச் செயற்றிட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. “டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி” எனும் மகுடத்தின் கீழ், 2026 ஜூலை 11 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 09 ஆம் திகதி வரை ஒரு மாத காலத்திற்கு இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, கல்முனை ஆசாத் பிளாசா மண்டபத்தில்

டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி: ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் விசேட ஒழிப்புச் செயற்றிட்டம் ஆரம்பம்! Read More »

விமட்டக்களப்பு மாவட்ட மட்ட விளையாட்டு விழாவில் எல்லே போட்டியில் செங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டு கழகம் மகளீர் பிரிவிலும், களுவன்கேணி பாரதி விளையாட்டு கழகம் ஆண்கள் பிரிவிலும் மட்டக்களப்பு மாவட்ட சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டன.

50 வது தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மட்ட விளையாட்டு விழாவில் எல்லே போட்டி மட்டக்களப்பு பெவர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனை வடக்கு (மட்டக்களப்பு) ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) மண்முனை தென் எருவில்ப்பற்று (களுவாஞ்சிக்குடி), கோறளைப்பற்று தெற்கு (கிரான்), மண்முணை மேற்கு (வவுணதீவு), பட்டிப்பளை (கொக்கட்டிச்சோலை) ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிருந்து மகளீர் அணிகள் மாவட்ட மட்ட எல்லே போட்டியில் கலந்துகொண்டன. இறுதிப்போட்டிக்கு ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேசத்திருந்து கோல்ட்

விமட்டக்களப்பு மாவட்ட மட்ட விளையாட்டு விழாவில் எல்லே போட்டியில் செங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டு கழகம் மகளீர் பிரிவிலும், களுவன்கேணி பாரதி விளையாட்டு கழகம் ஆண்கள் பிரிவிலும் மட்டக்களப்பு மாவட்ட சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டன. Read More »

வெளிநாட்டுக் கடன்களின்றி இரு புதிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள்; ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

இலங்கையில் இரண்டு புதிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களை எவ்வித புதிய வெளிநாட்டுக் கடன்களும் இன்றி, உள்நாட்டு நிதியைக் கொண்டு முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். ரம்புக்கனை முதல் கலகெதர வரையான மற்றும் குருநாகல் முதல் தம்புள்ளை வரையான அதிவேக நெடுஞ்சாலைகளே இவ்வாறு புதிய திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளன. வழமையாக இலங்கையில் முன்னெடுக்கப்படும் பிரம்மாண்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு வெளிநாட்டுக் கடன்கள் பெறப்படும் நடைமுறைக்கு மாற்றாக, இம்முறை அரசாங்கத்தின் சொந்தப் திறைசேரி நிதியைக் (Treasury funds) கொண்டு

வெளிநாட்டுக் கடன்களின்றி இரு புதிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள்; ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு! Read More »

சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நியமனத்தை மீளாய்வு செய்ய கோரி கவனயீர்ப்பு

சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நடைமுறையை மீளாய்வு செய்யக்கோரி இன்று (13) திருகோணமலை மாகாண சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம் பெற்றன. நியாயமான ஆட்சேர்ப்பு வேண்டும்,அநுர ஆட்சியில் அநீதியா? போன்ற வாசகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். மத்திய அரசாங்க சுகாதார அமைச்சினால் குறித்த வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.  தங்களுக்கு நியாயமான நியமனங்களை அரசியல் தலையீடு இன்றி வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நியமனத்தை மீளாய்வு செய்ய கோரி கவனயீர்ப்பு Read More »

பேங்கொக் களியாட்ட விடுதி தீ விபத்தில் 27 பேர் பலி

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றில் இன்று (13) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 9 ஆண்களும், 18 பெண்களும் அடங்குவதாக அந்த நாட்டின் பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் 63 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சமீபத்திய ஆண்டுகளில் தாய்லாந்தில் நடைபெற்ற மிக மோசமான தீ விபத்துகளில் ஒன்றாக

பேங்கொக் களியாட்ட விடுதி தீ விபத்தில் 27 பேர் பலி Read More »

முறக்கொட்டாஞ்சேனை புனித பவுலின் ஆலயத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் விசேட விஜயம்; கல்வி, சமூக மேம்பாடு குறித்து கலந்துரையாடல்!

மட்டக்களப்பு, முறக்கொட்டாஞ்சேனை புனித பவுலின் ஆலய அடிகளார் மற்றும் நிர்வாகிகளின் விசேட அழைப்பின் பேரில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள் நேற்று (12.07.2026) விசேட விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது, ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், ஆன்மீக ஆசிகளைப் பெற்றுக்கொண்டார். மரியாதை நிமிர்த்தமான இச் சந்திப்பைத் தொடர்ந்து, ஆலய நிர்வாகத்தினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் பல முக்கிய விடயங்கள் குறித்த கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது. குறிப்பாக,

முறக்கொட்டாஞ்சேனை புனித பவுலின் ஆலயத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் விசேட விஜயம்; கல்வி, சமூக மேம்பாடு குறித்து கலந்துரையாடல்! Read More »

யாழ். பல்கலைக்கழகத்தில் முல்லைத்தீவு மாணவியின் ‘அயம்’ கவிதை நூல் வெளியீடு!

யாழ்/ பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீடத்தின், மனிதவள முகாமைத்துவத் துறையின் தலைவர் கலாநிதி ஆறுமுகம் சரவணபவன் தலைமை தாங்கிய மேற்படி நிகழ்வில், பிரதம விருந்தினராக, முகாமைத்துவ வணிக பீடத்தின் உபபீடாதிபதி பேராசிரியர் பி.பிரதீப்காந் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினர்களாக.. மூத்த கவிஞர் அமர்சிங்கம் கேதீஸ்வரன், ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் க.கிருஷ்ணமூர்த்தி, சந்தக்கவிஞர் முல்லைத்தீபன் ஆகியோர் கலந்துகொண்டனர். கௌரவ விருந்தினர்களாக.. நடன ஆசிரியர் திருமதி கிருபா ஜெய்க்குமார், ஓய்வு நிலை வாத்தியப் பொறுப்பாளர் திரு அண்ணாமலை

யாழ். பல்கலைக்கழகத்தில் முல்லைத்தீவு மாணவியின் ‘அயம்’ கவிதை நூல் வெளியீடு! Read More »

போலி ஆவணங்கள் மூலம் வாக்காளர் அட்டை பெற்ற இலங்கைத் தம்பதி சென்னை விமான நிலையத்தில் கைது!

முறையான இந்தியக் குடியுரிமை ஆவணங்கள் இன்றி, போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டை பெற்றுத் தேர்தலில் வாக்களித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தம்பதியினர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 69 வயதுடைய முதியவரும், அவரது மனைவியும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை, தியாகராயநகர் (டி. நகர்) பகுதியில் தங்கியிருந்து வசித்து வந்துள்ளனர். இவர்கள் இந்தியக் குடியுரிமைச் சான்றிதழ்கள் எதுவும் இல்லாத நிலையில், போலியான முகவரி ஆதாரங்களைச்

போலி ஆவணங்கள் மூலம் வாக்காளர் அட்டை பெற்ற இலங்கைத் தம்பதி சென்னை விமான நிலையத்தில் கைது! Read More »