நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை; பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை!

இன்றைய தினம் (10) நாட்டின் பல பாகங்களிலும் பரவலாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

  • மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது.
  • முல்லைத்தீவு, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று வீசும் பகுதிகள்: மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய, சபரகமுவ மாகாணங்கள் மற்றும் மொனராகலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, மன்னார் ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

Share the Post: