July 10, 2026

கல்லடி பாலத்தில்  ஆண் ஒருவர் தன்னைதானே கழுத்தை அறுத்து தற்கொவை செய்ய முயற்றியையடுத்து அங்கு பெரும் பரபரப்பு–

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆடைகளை களைந்து தன்னுடைய கழுத்தை தானே பிளோற்றினால் வெட்டி தற்கொலை செய்ய முயற்நித்த ஆண் ஒருவரை பொதுமக்;கள் பொலிசாருடன் மீட்டு வைத்தியசாiலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (10) பகல் 11.30 மணிக்கு இடம்பெற்றதையடுத்து அங்;கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறித்த பாலத்தில் சம்பவ தினமான இன்று பகலில் திடீரென வீதியில் வந்த ஆண் ஒருவர் தான் அணிந்திருந்த ஆடைகளை கழற்றிவிட்டு பிளோற்றினால் தனது கழுத்ழத தானே வெட்டி தற்கொலை […]

கல்லடி பாலத்தில்  ஆண் ஒருவர் தன்னைதானே கழுத்தை அறுத்து தற்கொவை செய்ய முயற்றியையடுத்து அங்கு பெரும் பரபரப்பு– Read More »

திருக்கோனேஸ்வரா ஆலயத்துக்கு விஜயம் செய்த ஆசிய இராஜதந்திரிகள்

ஹஸ்பர் ஏ.எச்- திருகோணமலைக்கு விஜயம் செய்த ஆசிய நாட்டு இராஜதந்திரிகள் இன்று (10) திருகோணமலை திருக்கோனேஸ்வரா ஆலயத்துக்கு சென்று விசேட வழிபாட்டில் ஈடுபட்டனர். மலேசியா,இந்தோனேசியா,மியன்மார், தாய்லாந்து,வியட்நாம் ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுக் குழுவினர் குறித்த பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர். இதன் போது முக்கிய இடமான திருகோணமலை சுற்றுலா துறை தொடர்பான விளக்கங்களை திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் தலைவர் குமார் ஜெயக்குமார் தெளிவூட்டினார். திருகோணமலை மாவட்டத்துக்கு விஜயம் செய்த தூதுக்குழு வினர் சுற்றுலா துறை முதலீட்டு வாய்ப்புக்கள்

திருக்கோனேஸ்வரா ஆலயத்துக்கு விஜயம் செய்த ஆசிய இராஜதந்திரிகள் Read More »

ஊரணி  சந்திப்பில் முச்சக்கர வண்டி-சிற்றூர்தி(வேன்)  நேருக்கு நேர் மோதி விபத்து  – 55 வயது குடும்பஸ்தர் பலிபாறுக் ஷிஹான்

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் – அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஊரணி  சந்திக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை (09) காலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் படுகாயமடைந்த சிற்றூர்தி(வேன்) மேலதிக சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் காரைதீவு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய  மார்க்கண்டு ஜெயநாதன் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் இறந்தவர் கதிர்காம பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்காக உகந்தையில் உணவு தயாரித்து கொடுத்து

ஊரணி  சந்திப்பில் முச்சக்கர வண்டி-சிற்றூர்தி(வேன்)  நேருக்கு நேர் மோதி விபத்து  – 55 வயது குடும்பஸ்தர் பலிபாறுக் ஷிஹான் Read More »

பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் அறிவித்தல் – 2026

இலங்கை பைத்துல்மால் நிதியம் (Ceylon Baithulmal Fund) மூலம் 2026 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன! தகுதிவாய்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் அல்லது உங்களுக்கு தெரிந்த மாணவர்களுக்கு இதனை உடனடியாகப் பகிர்ந்து உதவுங்கள். யார் விண்ணப்பிக்கலாம்? கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட மாணவர்கள் மாத்திரம் விண்ணப்பிக்க முடியும்: 📢 உதவி தேவைப்படும் மாணவர்களைச் சென்றடைய இந்தத் தகவலை பல்கலைக்கழக மற்றும் ஊர் வாட்ஸ்அப் குழுக்களில் அதிகம் பகிருங்கள்! 🙏

பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் அறிவித்தல் – 2026 Read More »

மன்னார் பிரபல பெண்கள் பாடசாலையில் அதிர்ச்சிச் சம்பவம்: கேள்விக்குத் தவறான பதிலளித்த தரம் 5 சிறுமிக்கு ஆசிரியர் கொடூரத் தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி!

மன்னாரில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் தரம் ஐந்து (05) இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர், வகுப்பாசிரியரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, பதிலளித்ததால் நேர்ந்த கொடூரம்: குறித்த பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான விசேட வகுப்பொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த போது, வகுப்பாசிரியர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அச்சிறுமி

மன்னார் பிரபல பெண்கள் பாடசாலையில் அதிர்ச்சிச் சம்பவம்: கேள்விக்குத் தவறான பதிலளித்த தரம் 5 சிறுமிக்கு ஆசிரியர் கொடூரத் தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி! Read More »

பிரதம செயலாளர் கடமை பொறுப்பேற்பு

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக பதவி ஏற்ற கே. குணநாதன் நேற்று (09) திருகோணமலையில் உள்ள பிரதம  செயலாளர் அலுவலகத்தில் கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக கடமையை பொறுப்பேற்றார். இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர உட்பட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

பிரதம செயலாளர் கடமை பொறுப்பேற்பு Read More »

21 வயது இளம் தாய் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர் ஒருவர் கைது

(கனகராஜா சரவணன் ) ஹோட்டல் ஒன்றில் சுத்திகரிப்பு கடமையில் ஈடுபட்டு வந்த 21 வயது பெண் ஒருவரை மீது பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் 50 வயதுடைய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை (09) பிற்பகல் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது குறித்த நகரசபை உறுப்பினரின் ஹோட்டல் ஒன்றின் சுத்திகரிப்பு வேலைக்கு வெற்றிடம் இருந்து வந்துள்ள நிலையில் திருமணம்

21 வயது இளம் தாய் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர் ஒருவர் கைது Read More »

கல்முனை மாநகர பதில் ஆணையாளருக்கு அச்சுறுத்தல்: பொலிஸார் விசாரணைகள் ஆரம்பம்

பாறுக் ஷிஹான்கடமைகளை உரிய முறையில் செய்யாத ஊழியரிடம் விளக்கம் கோரிய கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளரை, குறித்த ஊழியர் அச்சுறுத்திய சம்பவம் ஒன்று நேற்று வியாழக்கிழமை (09) கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகர சபை எல்லைக்குள் இடம்பெறும் சில குறைபாடுகள் தொடர்பில் தமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக, கல்முனை மாநகர சபை பதில் ஆணையாளர் நூர்தீன் முகம்மட் நெளபீஸ்  கள விஜயம்

கல்முனை மாநகர பதில் ஆணையாளருக்கு அச்சுறுத்தல்: பொலிஸார் விசாரணைகள் ஆரம்பம் Read More »

மூதூரில் வீட்டின் மீது மோதிய தனியார் பஸ் – சாரதி காயம்

​மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 64ஆம் கட்டைப் பகுதியில் இன்று (10) அதிகாலை சுமார் 5.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், வீடு ஒன்று கடுமையாகச் சேதமடைந்ததுடன் பஸ் சாரதி காயமடைந்துள்ளார். கதிர்காமத்திற்குப் பயணிகளை ஏற்றிச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த தனியார் பஸ், திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் அமைந்திருந்த ரபீக் பாஷில் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் மீது மோதியுள்ளது. அதிர்ஷ்டவசமாக விபத்து இடம்பெற்ற வேளையில் வீட்டில் எவரும் இல்லாததால் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.

மூதூரில் வீட்டின் மீது மோதிய தனியார் பஸ் – சாரதி காயம் Read More »

உகந்தை – கதிர்காமம் வரலாற்றுச் சிறப்புமிக்க காட்டுப்பாதை இன்று உத்தியோகபூர்வமாக திறப்பு: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை மலையிலிருந்து கதிர்காமம் நோக்கிய காட்டுப்பாதை புனித பாதயாத்திரைக்காக இன்றைய தினம் (10) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாட்டின் நாலா திசைகளிலிருந்தும் வருகை தந்து உகந்தை முருகன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஆன்மீக பக்தர்கள், கதிர்காம கந்தனை நோக்கித் தங்களது புனித பாதயாத்திரையை பக்திப் பரவசத்துடன் ஆரம்பித்துள்ளனர். பலத்த பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய மருத்துவ, குடிநீர் வசதிகளுடன் இந்த வருடத்திற்கான காட்டுப்பாதை பயண ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உகந்தை – கதிர்காமம் வரலாற்றுச் சிறப்புமிக்க காட்டுப்பாதை இன்று உத்தியோகபூர்வமாக திறப்பு: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை ஆரம்பம்! Read More »