admin

மட்டக்களப்பில் மூன்றாவது தடவையாக இடம்பெறும்டீ Batticaloa Expo 2026 கண்காட்சியில்சிறுவர்களுக்கும் குதுகலம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணத்துறை, தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறைகளை வலுப்படுத்தும் நோக்கில் Batticaloa Expo 2026 நிகழ்வானது மட்டக்களப்பில் மிகப் பிரமாண்டமான முறையில் இடம்பெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது தடவையாக இடம் பெறவுள்ள Batticaloa Expo 2026  கண்காட்சியானது எதிர்வரும் ஒக்டோபர் 1,2,3 மற்றும் 4 திகதி வரையான நான்கு நாட்கள் மட்டக்களப்பு – கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளதுடன், இதில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெறுவதுடன் இதில் சிறுவர்களுக்கான குதூகல விநோத அம்சங்களும் காணப்படவுள்ளதனால் குடும்ப சகிதம் கலந்து கொண்டு

மட்டக்களப்பில் மூன்றாவது தடவையாக இடம்பெறும்டீ Batticaloa Expo 2026 கண்காட்சியில்சிறுவர்களுக்கும் குதுகலம் Read More »

மட்டக்களப்பில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல்  நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று வியாழக்கிழமை(17.09.2023) களுதாவளை, களுவாஞ்சிகுடி, மாங்காடு போன்ற பல ககுதிகளிலும் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்திக்கு மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். செப்டம்பர் 15 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரைக்கும்

மட்டக்களப்பில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு Read More »

இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுப்போம்”: மருதமுனையில் சமூக நீதிக் கட்சியின் பொதுக் கூட்டம்

(பாறுக் ஷிஹான்) “இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்” எனும் கருப்பொருளில் சமூக நீதிக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பொதுக் கூட்டமும், சமூகப் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலும் நேற்று (16) மாலை மருதமுனை கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சமூக நீதிக்  கட்சியின் தலைவரும், தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினருமான அர்க்கம் முனீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மருதமுனை இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்வில் தலைமை

இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுப்போம்”: மருதமுனையில் சமூக நீதிக் கட்சியின் பொதுக் கூட்டம் Read More »

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்.

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை(16.09.2026) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில், பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபனின் ஏற்பாட்டில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதேச செயலகப் பிரிவில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன. இதன்போது சின்னப் புணாணைப் பகுதியில் நிலவும் குடிநீர்ப்

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம். Read More »

மட்டக்குளி கந்தேஉட பகுதியில் கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த காரால் மூன்று பேர் பலி; பலர் காயம்!

கொழும்பு, மட்டக்குளி – கந்தேஉட (ராஸ்ஸ மூனகந்த) பகுதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். வத்தளை பகுதியிலிருந்து அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் பயணித்த மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். விபத்தை

மட்டக்குளி கந்தேஉட பகுதியில் கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த காரால் மூன்று பேர் பலி; பலர் காயம்! Read More »

இலங்கைப் பாரம்பரிய ஆடைகளை அணிந்து மகிழ்ந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள்

நியூசிலாந்து பெண்களைக் கவர்ந்த ‘மொரிட்டா அட்வென்ச்சர்ஸ்’: அருகம்பையில் மீன்பிடிப் பயணமும் பார்பிக்யூ விருந்தும்! இலங்கைப் பாரம்பரிய ஆடைகளை அணிந்து மகிழ்ந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள்  பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் பொத்துவில், அருகம்பைப் பகுதியில் இயங்கி வரும் ‘மொரிட்டா அட்வென்ச்சர்ஸ்’ (Morita Adventures) சுற்றுலா அமைப்பினூடாக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த இரு இளம் பெண்கள் மீன்பிடிப் பயணத்தில் இணைந்து மறக்க முடியாத அனுபவத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர். பொத்துவில் மீனவரான  தஸ்லீமின் வழிகாட்டலில்   கடலுக்குச் சென்ற குறித்த சுற்றுலாப்

இலங்கைப் பாரம்பரிய ஆடைகளை அணிந்து மகிழ்ந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் Read More »

அடுத்த சில மாதங்களில் கடுமையான வெப்பநிலை நிலவக்கூடும்: தீவிரமடையும் ‘El Niño’ காலநிலை மாற்றம் தொடர்பில் எச்சரிக்கை!

2027 பிப்ரவரி வரை நீடிக்க 100% வாய்ப்பு: அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு பாறுக் ஷிஹான் பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள அசாதாரண வெப்ப மாற்றம் காரணமாக ‘El Niño’ காலநிலை முறை தீவிரமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் உலகெங்கிலும் கடுமையான வெப்பம், வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற வானிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும் உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது. இந்த நிகழ்வானது 2026 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் உச்சத்தை

அடுத்த சில மாதங்களில் கடுமையான வெப்பநிலை நிலவக்கூடும்: தீவிரமடையும் ‘El Niño’ காலநிலை மாற்றம் தொடர்பில் எச்சரிக்கை! Read More »

மறுமலர்ச்சி நகரம்’: சம்மாந்துறையில் கோலாகலமாக ஆரம்பமானது உள்ளூராட்சி வார நிகழ்வுகள்!

முதல்நாளில் வீடு வீடாகச் சென்று ஆதன வரி நிலுவை சேகரிப்பு நடவடிக்கை பாறுக் ஷிஹான் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் “வளமான நாடு – அழகான வாழ்வு” திட்டத்தின் கீழ், “மறுமலர்ச்சி நகரம்” எனும் கருப்பொருளில் சம்மாந்துறை பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி வார நிகழ்வுகள் இன்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.

மறுமலர்ச்சி நகரம்’: சம்மாந்துறையில் கோலாகலமாக ஆரம்பமானது உள்ளூராட்சி வார நிகழ்வுகள்! Read More »

கிழக்கு மாகாண ஆளுநருடன் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் விசேட சந்திப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்னசேகரவை நேற்று (15.09.2026) திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இச்சந்திப்பின் போது, மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் சமகாலப் பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு கோரிக்கைகள் ஆளுநரிடம் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக

கிழக்கு மாகாண ஆளுநருடன் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் விசேட சந்திப்பு Read More »

எயார்பஸ் கொடுக்கல்-வாங்கல் வழக்கு: சந்தேகநபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ கொழும்பு கோட்டை நீதிமன்றில் முன்னிலை!

சர்ச்சைக்கரிய எயார்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு கொடுக்கல்-வாங்கல் தொடர்பான நிதிச் சலவை வழக்கு விசாரணைக்காக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜரானார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், இவ்வழக்கின் சந்தேகநபராக நாமல் ராஜபக்ஷ அண்மையில் பெயரிடப்பட்டிருந்தார். வழக்கின் பின்னணி & முக்கிய விவரங்கள் இன்றைய வழக்கு விசாரணையின் போது சட்டத்தரணிகள் பலர் நாமல் ராஜபக்ஷ சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

எயார்பஸ் கொடுக்கல்-வாங்கல் வழக்கு: சந்தேகநபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ கொழும்பு கோட்டை நீதிமன்றில் முன்னிலை! Read More »