August 24, 2026

சமூக ஊடகங்களுக்குக் கட்டுப்பாடு: 16 வயதிற்குட்பட்டோருக்குத் தடை விதிக்க நியூசிலாந்தில் புதிய சட்டமூலம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான புதிய ‘இணைய பாதுகாப்பு சட்டமூலத்தை’ (Online Safety Bill) நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் (Christopher Luxon) அறிவித்துள்ளார். சிறுவர்கள் சமூக ஊடக அடிமைத்தனம், இணையவழித் துன்புறுத்தல்கள் (Cyberbullying) மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய சட்ட விதிமுறைகளின்படி, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக் மற்றும் ஸ்னப்சாட் போன்ற முன்னணி சமூக ஊடக

சமூக ஊடகங்களுக்குக் கட்டுப்பாடு: 16 வயதிற்குட்பட்டோருக்குத் தடை விதிக்க நியூசிலாந்தில் புதிய சட்டமூலம்! Read More »

சமிந்த விஜேசிறிக்கு பிணை: மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை வரை நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடையும் வரை, அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சமிந்த விஜேசிறி தரப்பினால் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், வழக்கு விசாரணை நிறைவுறும் வரை அவருக்கு பிணை அனுமதி வழங்கி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சமிந்த விஜேசிறிக்கு பிணை: மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை வரை நீதிமன்றம் இடைக்கால உத்தரவு Read More »

ஜனாதிபதி தமிழர்களுக்கு நல்லது செய்வதாக காட்டும் செயற்பாட்டை நம்பி தமிழ் மக்கள் ஏமாந்து விடக் கூடாது– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ்

(கனகராஜா சரவணன்)   ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்க வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழர்களுக்கு ஏதே நல்லது செய்வதாக காட்டிக் கொண்டு  தன் பக்கம் ஈர்க்கும்  செயல்பாட்டை செய்து வருகின்றார் எனவே தமிழ் மக்கள் ஏமாந்து விடக் கூடாது என்பதுடன் வரப்போகும் ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்கு தொடர்பான பொதுசன வாக்கெடுப்புக்கு எதிராக அனைத்து அரசியல் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ். தெரிவித்தார்.   தமிழ் தேசிய மக்கள் முன்னணி

ஜனாதிபதி தமிழர்களுக்கு நல்லது செய்வதாக காட்டும் செயற்பாட்டை நம்பி தமிழ் மக்கள் ஏமாந்து விடக் கூடாது– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் Read More »

சாய்ந்தமருதில் சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷனின் முக்கிய கலந்துரையாடல்!

சாய்ந்தமருது (எம்.என்.எம்.அப்ராஸ்): சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷன் (IHRGM) அமைப்பின் முக்கிய கலந்துரையாடல் சாய்ந்தமருதில் நேற்று (23) வெற்றிகரமாக நடைபெற்றது. அமைப்பின் தேசிய தலைவர் ஏ.ஆர். அமீர்கான் அவர்களின் வழிகாட்டலில்; பணிப்பாளர் எஸ்.எல். றசீட் மற்றும் பிரதி பணிப்பாளர்களான எம்.ஐ. அப்ரோஸ், எம்.பி. நூமைசா, எஸ்.எப். சஹானி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இக்கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. முக்கிய முடிவுகள் & திட்டமிடுதல்: அத்துடன், மனித உரிமைகள் பாதுகாப்பை உறுதி செய்து, மக்களின் அன்றாட சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும்

சாய்ந்தமருதில் சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷனின் முக்கிய கலந்துரையாடல்! Read More »

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாக நிறைவடைந்தது ‘FIASTA’26’ கண்காட்சி!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ‘தொப்பிகல’ வளாகத்தில் (Thoppigale Premises) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘FIASTA’26 – Grand Stall Exhibition’ கண்காட்சி நேற்று (23) மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. நேற்று காலை 9:00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்ற இக்கண்காட்சியில், பலதரப்பட்ட உணவு அரங்குகள், கலை மற்றும் கலாச்சாரக் கண்காட்சிகள், சுவாரஸ்யமான பொழுதுபோக்கு விளையாட்டுகள் மற்றும் மாணவர்களின் விசேட கைவினைப் பொருட்கள் அடங்கிய பல வித்தியாசமான கண்காட்சி மூடீடுகள் (Stall-கள்) பார்வையாளர்களைக் கவர்ந்தன. இவ்விழாவில் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமன்றி, பொதுமக்கள்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாக நிறைவடைந்தது ‘FIASTA’26’ கண்காட்சி! Read More »

மீனவர்கள், தேன் சேகரிப்பாளர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற எம்.பி சிறிநாத் முயற்சி!

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களால் மாதம்தோறும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் குறைகேள் சந்திப்பின் ஒரு அங்கமாக, வாகரை, பால்சேனை மற்றும் நாகபுரம் கிராம மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பான மக்கள் குறைகேள் சந்திப்பு ஒன்று ​கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை உறுப்பினர் திரு.சுவேந்திரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் ( 23.08.2026 ) நேற்றைய

மீனவர்கள், தேன் சேகரிப்பாளர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற எம்.பி சிறிநாத் முயற்சி! Read More »

அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை: யாழ்ப்பாணத்தில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ. 6.68 இலட்சம் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட மற்றும் அச்சிடப்பட்ட விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் மொத்தம் 668,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளைத் தொடர்ந்து, நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்குகளிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்ட விவரங்கள்: 120 ரூபாய் அதிகபட்ச சில்லறை விலை கொண்ட ஒரு லீட்டர் குடிநீர் போத்தலை 200 ரூபாய்க்கு விற்பனை செய்த

அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை: யாழ்ப்பாணத்தில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ. 6.68 இலட்சம் அபராதம்! Read More »

காத்தான்குடியில் பொலிஸார் விசேட போக்குவரத்து நடவடிக்கை: பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் விசேட போக்குவரத்து சோதனைக் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (21.08.2026) மாலை 7:00 மணி முதல் நள்ளிரவு வரை இச்சோதனை நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஐ.பி. ஏ.எம்.ஆர்.என். அழககோன் (IP) அவர்களின் வழிகாட்டலில், சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரி ரிஷான் மதுசாந்த (IP) மற்றும் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி செனவிரட்ன (SI) ஆகியோரின் தலைமையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தைச்

காத்தான்குடியில் பொலிஸார் விசேட போக்குவரத்து நடவடிக்கை: பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை! Read More »

ஈழத்து_ திருகோணமலை கலைஞர்களின் “AAROHI “–காதல் வாழ்க்கையைப் பேசும் திரைப்படம் வெளியீடு 

ஹஸ்பர் ஏ ஹலீம் – ஈழத்து திருகோணமலையைச் சேர்ந்த கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகியுள்ள AAROHI திரைப்படம் (23.08.2026) மூன்றாவது தடவையாக திருகோணமலை நெல்சன் திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் திரையிடப்பட்டது. இதற்கான திரையரங்கில் திரையிட அனுசரனையை குமார் ஜெயக்குமாரன் பவுண்டேசனின் தலைவரும் தொழிலதிபருமான குமார் ஜெயக்குமாரன் வழங்கியிருந்தார். இதில் பிரதான நடிகன்,நடிகை கதாபாத்திரங்களாக திருகோணமலையை சேர்ந்த இளம் கலைஞர்களான சஹ்ஜாத் குத்பா,ஜெனீசியா ஜெகதீஸ் ஆகியோர்கள் நடித்திருந்தனர்.குறித்த திரைப்பட கதை,வசனங்களை நடிகராக நடித்தவரே இயற்றியுள்ளார். இதில் குறித்த நடிகையின் சொந்த

ஈழத்து_ திருகோணமலை கலைஞர்களின் “AAROHI “–காதல் வாழ்க்கையைப் பேசும் திரைப்படம் வெளியீடு  Read More »