August 11, 2026

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையால் சேகரிக்கப்படும் கழிவுகளை முகாமை செய்துவது தொடர்பில் அரச திணைக்கள அதிகாரிகளுடன் உயர் மட்ட கலந்துரையாடல்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை முறையாக முகாமை செய்து அவற்றை அகற்றுவது தொடர்பில் துறைசார்ந்த அதிகாரிகளின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெறும் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை (11.08.2026) களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, கரையோரம் பேணல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பொலிசார், கடற்படை, […]

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையால் சேகரிக்கப்படும் கழிவுகளை முகாமை செய்துவது தொடர்பில் அரச திணைக்கள அதிகாரிகளுடன் உயர் மட்ட கலந்துரையாடல். Read More »

மொனராகலையில் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது இ.போ.ச பஸ்: சாரதி தீவிர சிகிச்சை பிரிவில், பயணிகள் காயம்!

மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கி சுமார் 45 பயணிகளுடன் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான (இ.போ.ச) பஸ் ஒன்று இன்று (11) அதிகாலை 3.55 மணியளவில் வீதியை விட்டு விலகி 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. புத்தள – மஹகொடய பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் படுகாயமடைந்த பஸ்ஸின் சாரதி மொனராகலை போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், காயமடைந்த ஏனைய பயணிகளும் சிகிச்சைக்காக அதே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொனராகலையில் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது இ.போ.ச பஸ்: சாரதி தீவிர சிகிச்சை பிரிவில், பயணிகள் காயம்! Read More »

ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டிகளுக்கான நடுவர்களாகச் செயற்படவுள்ள வளவாளர்களை உருவாக்கும் பயிற்சி

நூருல் ஹுதா உமர்) கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டிகளுக்கான செயலமர்வு- கிழக்கு மாகாண கல்வி வலயங்களைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர்கள் பங்கேற்பு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில், ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டிகளுக்கான நடுவர்களாகச் செயற்படவுள்ள வளவாளர்களை உருவாக்கும் Training of Trainers (ToT) பயிற்சி செயலமர்வு நடைபெற்றது. மகாஓயா, அம்பாறை, திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட ஆங்கில

ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டிகளுக்கான நடுவர்களாகச் செயற்படவுள்ள வளவாளர்களை உருவாக்கும் பயிற்சி Read More »

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்துக்கு வரவேண்டும் – இம்ரான் எம். பி

ஹஸ்பர் ஏ.எச்- முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான  தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். கல்முனை வடக்கு வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடை தடை குறித்து இன்று (11)ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,  முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் சில அரச உத்தியோகத்தர்களால் தேவையற்ற தலையீடுகளுக்கு உள்ளாகின்றது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. ஒவ்வொரு சமூகத்தவரதும் சமய கலாசார உரிமைகள்

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்துக்கு வரவேண்டும் – இம்ரான் எம். பி Read More »

மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்!

(கனகராஜா சரவணன்) கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்பத் தேர் உற்சவம், இன்று (11) செவ்வாய்க்கிழமை காலை 6.50 மணியளவில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட கிரியை வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’ கோஷத்திற்கு மத்தியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி மாமாங்கேஸ்வரர் அருள்பாலித்தார்.மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளையும் ஒருங்கே கொண்ட

மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்! Read More »

வாகனேரி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு: பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் உறுதியளிப்பு

மட்டக்களப்பு மாவட்டம், கோறளைப்பற்று தெற்கு – வாகனேரி பகுதியில் போதிய நீர்வளம் இருந்தபோதிலும், பொதுமக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் குடிநீர் பிரச்சினை இதுவரையில் தீர்க்கப்படாமல் உள்ளது. பொதுமக்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு அமைவாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அண்மையில் அப்பகுதிக்கு நேரடி கள விஜயம் மேற்கொண்டார். வாகனேரிக் குளத்தைப் பார்வையிட்ட அவர், மக்களின் குடிநீர் தேவைகள் மற்றும் சவால்கள் குறித்துக் கேட்டறிந்ததுடன் பின்வரும்

வாகனேரி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு: பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் உறுதியளிப்பு Read More »

40 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கையும் மெய்யுமாகப் பிடிபட்டார் பாறுக் ஷிஹான்அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்   40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் திங்கட்கிழமை(10)  கைது செய்யப்பட்டுள்ளார். இக்கைது நடவடிக்கை அக்கரைப்பற்று – சாகாமம் வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. பொறிவைத்து பிடிபட்ட சம்பவம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட

40 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது Read More »

செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் குறித்து விசேட பயிற்சி அளிப்பு

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் குறித்து விசேட பயிற்சி அளிப்பு பாறுக் ஷிஹான் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொடர்பான விசேட பயிற்சி நிகழ்வு நேற்றைய தினம் (10) நடைபெற்றது. வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எல்.எம் றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில், செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகள், அதன் நடைமுறைப் பயன்பாடுகள் மற்றும் நவீன AI கருவிகளை அன்றாட

செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் குறித்து விசேட பயிற்சி அளிப்பு Read More »

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடையைக் காரணம் காட்டி, கடமை பொறுப்பேற்பதைத் தடுத்த விவகாரம்: சட்டத்தரணி முஅஸ்ஸம் வழிகாட்டலில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

– பாறுக் ஷிஹான் – கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நியமனம் பெற்ற உதவி சுகாதார உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமைக்கு எதிராக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் ஐந்து (5) முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டத்தரணி சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் வழிகாட்டலில், குறித்த முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்த்துக்கொள்வது தொடர்பில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரையும், சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரியையும் சட்டத்தரணி முஅஸ்ஸம் மற்றும் சட்டத்தரணி

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடையைக் காரணம் காட்டி, கடமை பொறுப்பேற்பதைத் தடுத்த விவகாரம்: சட்டத்தரணி முஅஸ்ஸம் வழிகாட்டலில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு Read More »

நீண்டகால ஹெரோயின் வியாபாரிகள் இருவர் கைது

இலத்திரனியல் தராசுடன் ஹெரோயின் பறிமுதல் – பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபரும் சிக்கினார் பாறுக் ஷிஹான் நீண்டகாலமாகச் சட்டவிரோதமான முறையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரு சந்தேகநபர்கள் திங்கட்கிழமை (10) மாலை சாய்ந்தமருது பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 44 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது  

நீண்டகால ஹெரோயின் வியாபாரிகள் இருவர் கைது Read More »