July 30, 2026

கிழக்கிலங்கையில் சின்ன கதிர்காமம் என போற்றப்படும் தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம்.

கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்ததுமான மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்த உற்சவம் வியாழக்கிழமை(30.07.2026) ஆயிரக்கணக்கான முருக பக்தர்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் இடம்பெற்றது. வியாழக்கிழமை அதிகாலை முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் இடம்பெற்றதன் பின்பு ஆலய முன்றலிலே அமைந்துள்ள தீர்த்தக் கேனியில் நாதஸ்வர மேளங்கள் தாளங்கள் முழங்க தீர்த்தத் திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது. கதிர்காம கந்தன் ஆலயத்திற்கு செல்ல முடியாத முருக பக்தஅடியார்கள் சின்னக் கதிர்காமம் அழைக்கப்படும் […]

கிழக்கிலங்கையில் சின்ன கதிர்காமம் என போற்றப்படும் தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம். Read More »

மட்டு நகரில் பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பியிருந்த வடிகான்கள்

மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின்கீழ் டெங்கு குடம்பிகள் அதிகமாக காணப்பட்ட பொது சுகாதாரப் பகுதிகளை இலக்கு வைத்து மட்டக்களப்பு மாநகர சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, ஆகியன இணைந்து இந்த துப்பதவு செய்யும் பணியை வியாழக்கிழமை(30.07.2026) முன்னெடுத்தன. இதன்போது மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பமாகிய இந்த துப்புரவுப்பணி பிரதான வீதியில் உள்ள வடிகான்கள் சுத்தப்படுத்தப்பட்டன. கடந்த காலத்தில் வீதி அபிவிருத்திக்காக பல மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும்

மட்டு நகரில் பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பியிருந்த வடிகான்கள் Read More »

செட்டிபாளையம் மைதானத்தில் 5 மில்லியன் ரூபா பெறுமதியான புனரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட செட்டிபாளையம் கண்ணகி விளையாட்டு மைதானம் 5 மில்லியன் ரூபா பெறுமதில் புனரமைப்புச் செய்யப்படவுள்ளன. அதன் ஆரம்ப வேலைத்திட்டம் புதன்கிழமை (29.07.2026) முதற்கட்டமாக அம்மைதானத்திற்குரிய தடுப்பச் சுவர் அமைப்பதற்கான அடிக்கல் நடப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டன. செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக்கழகத் தலைவர் வேணு கோபாலராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில பற்று பிரதேச சபையின்த விசாளர் மேகசுந்தரம் வினோராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தடுப்புச்

செட்டிபாளையம் மைதானத்தில் 5 மில்லியன் ரூபா பெறுமதியான புனரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு. Read More »

சுகீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு: ஆகஸ்ட் 12 வரை தொடர்ந்து விளக்கமறியல்!

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனுவை நிராகரித்த கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், அவரை எதிர்வரும் ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு இன்று (30) கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சந்தேகநபர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை ஆராய்ந்த நீதவான், அவருக்குப் பிணை வழங்குவதற்குரிய வலுவான

சுகீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு: ஆகஸ்ட் 12 வரை தொடர்ந்து விளக்கமறியல்! Read More »

பெந்தோட்டை கடலில் ‘பாராமோட்டர்’ விமானம் வீழ்ந்து விபத்து: வெளிநாட்டுப் பெண் சோக முடிவு!

பெந்தோட்டை சுற்றுலா வலயத்தில் நேற்றைய தினம் (ஜூலை 29) மாலையில் இடம்பெற்ற பாராமோட்டர் (Paramotor) சிறிய ரக விமான விபத்தில் 31 வயதுடைய வெளிநாட்டுப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பெந்தோட்டை கடற்கரை வீதியில் அமைந்துள்ள தனியார் சுற்றுலா நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்டு வந்த இந்த வான்வழிப் பயணத்தின் போதே இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது. நேற்று மாலை வேளையில், வானில் பறந்து கரையோர அழகை ரசிப்பதற்காகக் குறித்த சிறிய ரக பாராமோட்டர் விமானம் இயக்கப்பட்டது. கரையிலிருந்து சுமார்

பெந்தோட்டை கடலில் ‘பாராமோட்டர்’ விமானம் வீழ்ந்து விபத்து: வெளிநாட்டுப் பெண் சோக முடிவு! Read More »

நாமல் ராஜபக்ஷவின் நிதித்தூய்தாக்கல் வழக்கு ஒக்டோபர் 29 இற்கு ஒத்திவைப்பு!

நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பான விசாரணை இன்று (30) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதாரகம முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்றைய வழக்கு விசாரணையின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில்

நாமல் ராஜபக்ஷவின் நிதித்தூய்தாக்கல் வழக்கு ஒக்டோபர் 29 இற்கு ஒத்திவைப்பு! Read More »

வத்தளை, பள்ளியாவத்தையில் துப்பாக்கிச் சூடு – உதவி வழங்கிய 24 வயதுடைய ஒருவர் கைது

வத்தளை, கதிரான பள்ளியாவத்த பகுதியில் நடைபெற்ற விருந்து ஒன்றின் போது நபரொருவரைச் சுட்டுக் கொலை செய்வதற்கு உதவி மற்றும் ஒத்தாசை வழங்கிய சந்தேகநபரொருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூடானது, கொலைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் ‘மட்டக்குளிய குடு ரொஷான்’ என்பவரை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருந்தது. ரொஷானுடைய சகோதரர் ஒருவரின் பிள்ளையின் பிறந்தநாள் விருந்தின் போது, நபரொருவர்

வத்தளை, பள்ளியாவத்தையில் துப்பாக்கிச் சூடு – உதவி வழங்கிய 24 வயதுடைய ஒருவர் கைது Read More »

நாடு முழுவதும் மக்கள் வங்கியின் ATM சேவைகள் முடக்கம்: பொதுமக்கள் பெரும் அசெளகரியம்!

இன்று காலை முதல் நாடு முழுவதும் உள்ள மக்கள் வங்கியின் (People’s Bank) தானியங்கி பணப்பரிமாற்ற இயந்திரங்கள் (ATM) தற்காலிகமாகச் செயலிழந்ததால், பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களைச் சந்தித்துள்ளனர். வங்கியின் ஏடிஎம் (ATM) இயந்திரங்கள் மற்றும் கணினி நெட்வொர்க் கட்டமைப்பில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த சேவைத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஸ்தம்பித்த பணப்பரிவர்த்தனைகள் மாத இறுதி மற்றும் வாரநாட்களின் தேவைகளுக்காக வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்களுக்குச் சென்ற வாடிக்கையாளர்கள், பணத்தைப்பெற முடியாமல் திரும்பியுள்ளனர்.

நாடு முழுவதும் மக்கள் வங்கியின் ATM சேவைகள் முடக்கம்: பொதுமக்கள் பெரும் அசெளகரியம்! Read More »

வவுனியா கனகராயன்குளம் A9 வீதியில் கொடூர விபத்து: இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

வவுனியா – கனகராயன்குளம் பகுதி A9 பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற கொடூர வாகன விபத்தில் சிக்கி இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் படுகாயமடைந்த இருவரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏ9 (A9) பிரதான வீதியில் அண்மைக்காலமாக வீதி விபத்துக்களும், அதனால் நிகழும் உயிர் இழப்புகளும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. அதிவேகப் பயணம், சாரதிகளின் கவனக் குறைவு

வவுனியா கனகராயன்குளம் A9 வீதியில் கொடூர விபத்து: இருவர் பரிதாபமாக உயிரிழப்பு! Read More »

அவசர சிகிச்சைக்கு இனி பைக் ஆம்புலன்ஸ்! ‘1990 சுவசெரிய’ அமைப்பின் புதிய புரட்சிகர திட்டம்!

கொழும்பு: அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகளை விரைவாகச் சென்றடையும் நோக்கில், புதிய ‘மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை’ ஒன்றை (Motorbike First Responder Unit) அறிமுகப்படுத்த 1990 சுவசெரிய (Suwa Seriya) அறக்கட்டளை தீர்மானித்துள்ளது. நவீன உள்கட்டமைப்பு மற்றும் அதிவேகச் சேவைகளுக்குப் பெயர் பெற்ற சுவசெரிய, நாட்டின் சுகாதாரப் போக்குவரத்துத் துறையில் மற்றொரு மைல்கல்லாக இந்தச் சேவையை ஆரம்பிக்கவுள்ளது. இந்த புதிய சேவை முதற்கட்டமாக ஒரு முன்னோடித் திட்டமாக கொழும்பு உள்ளிட்ட பிரதான நகர்ப்புறங்களை

அவசர சிகிச்சைக்கு இனி பைக் ஆம்புலன்ஸ்! ‘1990 சுவசெரிய’ அமைப்பின் புதிய புரட்சிகர திட்டம்! Read More »