July 16, 2026

நியூசிலாந்தில் வாகன ஓடோமீற்றர் மோசடி: இலங்கையரின் நிறுவனத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடித் தண்டனை!

நியூசிலாந்து வரலாற்றில் முதல்முறையாக, வாகனத்தின் ஓட்ட அளவைக் காட்டும் ஓடோமீற்றர் (Odometer) கணிப்பீட்டை மாற்றி மோசடி செய்த வழக்கில், இலங்கையர் ஒருவரால் நிர்வகிக்கப்படும் கார் விற்பனை நிறுவனத்திற்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடித் தண்டனை வழங்கியுள்ளது. கிறிஸ்ட்சர்ச் நகரில் இயங்கி வரும் ‘Carporium’ (Sachis Holdings Ltd) என்ற கார் விற்பனை நிறுவனம், கடந்த 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் டொயோட்டா RAV4 ரக சொகுசு கார் ஒன்றை 24,000 நியூசிலாந்து டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளது. எனினும், அந்த […]

நியூசிலாந்தில் வாகன ஓடோமீற்றர் மோசடி: இலங்கையரின் நிறுவனத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடித் தண்டனை! Read More »

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக ஏ.ஜி. முபாறக் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்பு

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக ஏ.ஜி. முபாறக் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்பு பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) அவர்களின் உத்தரவிற்கமைவாக, நிந்தவூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (தரம் I)  ஏ.ஜி. முபாறக் நேற்று (15) நிந்தவூர் பிரதேச சபையில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் முன்னிலையில்  நடைபெற்றது. இதன்போது புதிய

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக ஏ.ஜி. முபாறக் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்பு Read More »

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (16) திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு  மற்றும் வெளி வகவகார பிரதி அமைச்சருமான  அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான  ஜயந்தலால் ரத்னசேகர, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்,மாகாண பிரதம செயலாளர் கே.குணநாதன் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்  டபிள்யூ ஜி

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் Read More »

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 அனைத்துப் பள்ளிவாசல்களிடமும் எழுத்துமூலம் மன்னிப்புக் கடிதம் பெற்றுச் சமர்ப்பிக்குமாறு நீதவான் நூர்டீன் சர்ஜூன் கட்டளை- வழக்கு ஒத்திவைப்பு. சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய காணொளியைத் தொடர்ந்து, வீதிகளில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை இயக்கி பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இன்று (16) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ குறித்த வழக்கு விசாரணையின் போது, சந்தேகநபர்களான இளைஞர்கள் தலைக்கவசம் அணியாமல், ஒரே மோட்டார்

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு Read More »

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க நகரின் 4 பிரதான அபிவிருத்தித் திட்டங்களை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்ய திட்டம்!

முடக்கப்பட்டிருந்த 14 பில்லியன் ரூபா செலவிலான கெட்டம்பே மேம்பாலம் உள்ளிட்ட பல திட்டங்கள் மூலோபாயத் திட்டத்தின்கீழ் விரைவுபடுத்தப்படுகின்றன. அமைச்சர் கே. டி. லால்காந்த மற்றும் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன ஆகியோரின் பங்கேற்புடன் நேற்று (15.07.2026) விசேட கள ஆய்வு நடைபெற்றது. மத்திய மாகாண அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் கண்டி புனித நகரத்தை மையமாகக் கொண்டு தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நான்கு பிரதான உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களின் கட்டுமானப் பணிகளை அடுத்த இரண்டு வருடங்களுக்குள் முழுமையாக நிறைவு

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க நகரின் 4 பிரதான அபிவிருத்தித் திட்டங்களை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்ய திட்டம்! Read More »

தமிழக எல்லையில் லேசான நிலநடுக்கம்: கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதியில் அதிர்வு!

தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு (ஜூலை 15, 2026) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் (NCS) தகவல்படி, நேற்று இரவு 7.52 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் கர்நாடகாவின் அண்டை பகுதி மக்கள் சில நொடிகள் லேசான அதிர்வை உணர்ந்துள்ளனர். எனினும், இது மிகவும் குறைந்த அளவிலான (Minor Earthquake) நிலநடுக்கம் என்பதால் வீடுகளுக்கோ

தமிழக எல்லையில் லேசான நிலநடுக்கம்: கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதியில் அதிர்வு! Read More »

சம்மாந்துறை மஸ்ஜிதுன் நகர் பள்ளிவாசலில் ‘மஜ்லிஸ் அஷ்ஷூரா சபை’ புதிய தலைவர் கௌரவிப்பு: சமூக மேம்பாட்டிற்கான புதிய ஆரம்பம்

​சம்மாந்துறை மஸ்ஜிதுன் நகர் பள்ளிவாசலில், வரலாற்றுப் பாரம்பரியமிக்க ‘மஜ்லிஸ் அஷ்ஷூரா சபை’யின் புதிய தலைவராகப் பதவியேற்றுள்ள விவசாய அபிவிருத்தி அதிகார சபையின் ஓய்வுபெற்ற மாகாண பணிப்பாளர் (ADA) அல்ஹாஜ் I.A. ஜப்பார் அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு (15/07/2026) நேற்று புதன்கிழமை இஷா தொழுகையைத் தொடர்ந்து மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​மஸ்ஜிதுன் நகர் பள்ளிவாசல் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், சம்மாந்துறை பிராந்தியத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு புதிய தலைவரை வாழ்த்தி

சம்மாந்துறை மஸ்ஜிதுன் நகர் பள்ளிவாசலில் ‘மஜ்லிஸ் அஷ்ஷூரா சபை’ புதிய தலைவர் கௌரவிப்பு: சமூக மேம்பாட்டிற்கான புதிய ஆரம்பம் Read More »

மருதமுனையில் பயங்கர விபத்து: பஸ் மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி!

மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இன்று காலை இடம்பெற்ற கொடூர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கதிர்காமத்தை நோக்கி அதிவேகமாக பயணித்த பேருந்து (Bus) ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பேருந்து சாரதியின் அதீத வேகமும், அஜாக்கிரதையான வாகன ஓட்டமுமே இந்த விபத்து நிகழ முக்கிய காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்

மருதமுனையில் பயங்கர விபத்து: பஸ் மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி! Read More »

இங்கிலாந்தின் உலகக் கிண்ணத் தோல்வி: “தலை நிமிர்ந்து நில்லுங்கள்” என இளவரசர் வில்லியம் மற்றும் பிரதமர் உருக்கமான வாழ்த்து!

அமெரிக்காவின் அட்லாண்டா மைதானத்தில் நடைபெற்ற 2026 உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் பரபரப்பான அரையிறுதிப் போட்டியில், அர்ஜென்டினா அணியிடம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது. இந்தத் தோல்வி குறித்து பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் தமது ஆழ்ந்த ஏமாற்றத்தையும், அதேவேளை அணியினருக்கான பாராட்டுகளையும் வெளிப்படுத்தியுள்ளனர். கென்சிங்டன் அரண்மனை ஊடாக இளவரசர் வில்லியம் (W) வெளியிட்டுள்ள தனிப்பட்ட எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

இங்கிலாந்தின் உலகக் கிண்ணத் தோல்வி: “தலை நிமிர்ந்து நில்லுங்கள்” என இளவரசர் வில்லியம் மற்றும் பிரதமர் உருக்கமான வாழ்த்து! Read More »

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரர் சரத் வீரவங்ச ஜூலை 22 வரை விளக்கமறியலில்!

அரசு வாகனங்களைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்சவை எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் (FCID) கம்பஹா பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார். பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களைத் துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் முறையற்ற நிதிப் பயன்பாடு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரர் சரத் வீரவங்ச ஜூலை 22 வரை விளக்கமறியலில்! Read More »