1 பில்லியன் டொலர் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்: கொழும்பில் 4 பிரபல தனியார் வங்கி முகாமையாளர்கள் அதிரடிப்படைக் கைது!
கொழும்பு கோட்டையிலுள்ள தனியார் நாணய மாற்று நிறுவனமொன்றின் ஊடாகச் சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்குப் பரிமாற்றம் செய்த சம்பவம் தொடர்பில், இலங்கையின் பிரதான 4 தனியார் வர்த்தக வங்கிகளின் 4 முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையின் போதே, சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளுக்குள்ளேயே வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இலங்கைக்கு எந்தவொரு பொருட்களையும் இறக்குமதி செய்யாமல், போலியான ஆவணங்களைப்






