June 30, 2026

நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

பாறுக் ஷிஹான் நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பழைய வளத்தாப்பிட்டி பகுதியில்   இச்சம்பவம் திங்கட்கிழமை(29)   முற்பகல் வேளையில் இடம்பெற்றிருந்தது. இதன் போது வில்லுக் குளத்தில்  குளிக்கச் சென்று  நீரில் மூழ்கி  மரணமடைந்த  முதியவரின் சடலம் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டதுடன்  63 வயது மதிக்கத்தக்க  வளத்தாப்பிட்டி மல்வத்தை  பகுதியைச் சேர்ந்த 4  பிள்ளைகளின் தந்தையான ஐமா சந்திரராஜ்  என அடையாளம் காணப்பட்டிருந்தார். மேலும் […]

நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு Read More »

புலிகள் பாவித்த ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு-அம்பாறையில் சம்பவம்

பாறுக் ஷிஹான் தமிழீழ விடுதலைப்புலிகள் பாவித்தத்தாக சந்தேகிக்கப்படும் ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை சாகாமம் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் விரிவிற்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு பக்மிட்டியா காட்டுப்பகுதியில் திங்கட்கிழமை(29) மாலை அப்பகுதியில் உள்ள மரப்பொந்து ஒன்றில் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. வழமை போன்று ரோந்து சென்ற விசேட அதிரடிப்படைக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய இத்தேடுதல் மேற்கொள்ளப்பட்டதுடன் மீட்கப்பட்ட ஆயுதங்கள் நீண்ட காலம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததனால் துருப்பிடித்திருப்பதாக எமது செய்தியாளர்

புலிகள் பாவித்த ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு-அம்பாறையில் சம்பவம் Read More »

வாட்ஸ்அப்பில் அதிரடி மாற்றம்: இனி போன் நம்பர் இல்லாமலேயே சாட் செய்யலாம்!

வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘பயனர் பெயர்’ (Username) அம்சம் தற்போது அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம், உங்களுடைய தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தை (Phone Number) மற்றவர்களுக்குப் பகிராமலேயே நீங்கள் யாருடன் வேண்டுமானாலும் பாதுகாப்பாகத் தொடர்புகொள்ள முடியும். நீங்கள் விரும்பினால், உங்களைத் தொடர்புகொள்பவர்களுக்கு உங்கள் தொலைபேசி இலக்கம் தெரியாதவாறு முழுமையாக மறைத்துக்கொள்ளும் பிரத்தியேக வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தைப் பயன்படுத்துவதற்குத் தகுதியுள்ள பயனர்கள், வாட்ஸ்அப் செயலியின் Settings

வாட்ஸ்அப்பில் அதிரடி மாற்றம்: இனி போன் நம்பர் இல்லாமலேயே சாட் செய்யலாம்! Read More »

அயர்லாந்துத் தொடரில் சூர்யவன்ஷி புறக்கணிப்பு: இந்திய அணி நிர்வாகத்தை வெளுத்து வாங்கிய முகமது கைஃப்!

அயர்லாந்துடனான இருபதுக்கு 20 (T20) தொடரில் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு விளையாட வாய்ப்பளிக்காத இந்திய அணி நிர்வாகத்தின் முடிவை, முன்னாள் நட்சத்திர வீரர் முகமது கைஃப் கடுமையாக விமர்சித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் (IPL) தொடரில் 237.30 என்ற அசுரத்தனமான ஓட்ட வேகத்துடன் (Strike Rate) 776 ஓட்டங்களைக் குவித்து ஓரஞ்சு தொப்பியை (Orange Cap) வென்ற வைபவ் சூர்யவன்ஷி, இந்த அயர்லாந்துத் தொடரில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாவார் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,

அயர்லாந்துத் தொடரில் சூர்யவன்ஷி புறக்கணிப்பு: இந்திய அணி நிர்வாகத்தை வெளுத்து வாங்கிய முகமது கைஃப்! Read More »

டெங்கு நோயிலிருந்து திருகோணமலையை பாதுகாக்க ஒருங்கிணைந்த அவசர நடவடிக்கை!

திருகோணமலை மாவட்டத்தில் வேகமாக அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, அனைத்து அரச துறைகளையும் உள்ளடக்கிய விசேட ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை ஒன்று உடனடியாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட டெங்கு பணிக்குழு கூட்டம் இன்று (ஜூன் 30), திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. பிரதி அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அருண் ஹேமச்சந்திரா இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். டெங்கு வைரஸ் வகைகள் மாறிவரும் நிலை.மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான மாற்றங்கள். திருகோணமலை

டெங்கு நோயிலிருந்து திருகோணமலையை பாதுகாக்க ஒருங்கிணைந்த அவசர நடவடிக்கை! Read More »

டொலரின் விற்பனை விலை வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய நாணய மாற்று வீதம்!

இலங்கை மத்திய வங்கி இன்று (30) வெளியிட்டுள்ள புதிய நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், டொலரின் விற்பனை விலையும் குறைவடைந்துள்ளது. அதற்கமைய, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 341.30 ரூபாயாகப் பதிவாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (26) இதன் விற்பனை விலை 341.87 ரூபாயாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச மற்றும் உள்நாட்டு பொருளாதாரக் காரணிகள் மற்றும் வெளிநாட்டு நாணயச் சந்தையின் நகர்வுகளுக்கு அமைவாக,

டொலரின் விற்பனை விலை வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய நாணய மாற்று வீதம்! Read More »

பிரியாவிடை பெற்றுச் செல்லவிருக்கும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கௌரவ சபாநாயகரைச் சந்தித்தார்

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் மாண்புமிகு கலாநிதி சிரி வால்ட் அவர்கள் பிரியாவிடை பெற்றுச் செல்லவிருக்கும் நிலையில் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் 24 பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர அவர்களும் கலந்துகொண்டார். சுவிட்சர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும், இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான நல்லுறவையும் மேலும் வலுப்படுத்துவதற்கு சபாநாயகர் வழங்கிய ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் தூதுவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இலங்கையில் தனது பதவிக்காலம் முழுவதும்

பிரியாவிடை பெற்றுச் செல்லவிருக்கும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கௌரவ சபாநாயகரைச் சந்தித்தார் Read More »

உலக குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை ATI யின் சமூகப் பணி.

உலக குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு, கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் சம்மாந்துறை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனம் (ATI) ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.எல். முஸ்தபாவின் வேண்டுகோளுக்கிணங்க, தகவல் தொழில்நுட்ப உயர் தேசிய டிப்ளோமா முதலாம் ஆண்டு மாணவர்களின் அனுசரணையுடன் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டீ. பிரபாஷங்கர் மற்றும் திட்டமிடல் வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.ஆர். நியாஸ் அஹமட் ஆகியோரின் வழிகாட்டல்

உலக குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை ATI யின் சமூகப் பணி. Read More »

சொத்து, கடன் விபரங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்றுடன் நிறைவு

சொத்து மற்றும் கடன் விபரக் கூற்றுக்களை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் இன்றுடன் (30) நிறைவடைவதாக இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை சொத்து மற்றும் கடன் விபரங்களை சமர்ப்பிக்காத அதிகாரிகள் இன்றைய தினத்திற்குள் அதனைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக, சொத்து மற்றும் கடன் விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அனைத்து அதிகாரிகளும் இணையவழி (Online) ஊடாகவே தங்களது விபரக்

சொத்து, கடன் விபரங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்றுடன் நிறைவு Read More »

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மறைமுக ஏகாதிபத்தியத்தையும் தோற்கடிக்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பண்டைய மன்னராட்சிக் காலத்தில் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக மன்னர்களும் அமைச்சர்களும் உன்னத சேவைகளை ஆற்றினர். நாட்டுக்கு பல்வேறு ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்ட சமயங்களில் அவர்கள் நாட்டைக் காப்பதற்காக தமது உயிரைப் பணயம் வைத்து சிறந்த சேவையாற்றினர். இன்றைய உலகில் நிலவும் உலகளாவிய புவிசார் அரசியல் பிரச்சினைகள் காரணமாக, இந்தியப் பெருங்கடல் அமைதி வலயமாவதற்குப் பதிலாகப் போர் அபாயத்திற்கு ஆளாகி காணப்படுகின்றது. அமைதி வலயமாய் இருந்த இந்தியப் பெருங்கடல் ஒரு கட்டத்தில் போரின்

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மறைமுக ஏகாதிபத்தியத்தையும் தோற்கடிக்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச Read More »