August 19, 2026

பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தர் கைது: அதிர்ச்சியில் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதி

பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர் நிந்தவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட வேளையில் அதிர்ச்சியால் மயங்கி விழுந்த நிலையைத் தொடர்ந்து பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமையின் போது குறித்த பெண் உத்தியோகத்தர் காணொளி (Video) எடுத்து அச்சுறுத்தல் விடுத்ததுடன், அக்காணொளியை சமூக வலைத்தளமான முகநூலிலும் பதிவேற்றம் செய்திருந்தார். இச் சம்பவம் தொடர்பில்

பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தர் கைது: அதிர்ச்சியில் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதி Read More »

திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்

திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக் கூட்டமானது, மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நேற்று (18) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ​முந்தைய கூட்டங்களில் எட்டப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய செயல்பாட்டு முன்னேற்றம் குறித்து இதன்போது மதிப்பீடு செய்யப்பட்டது. நிலுவையில் உள்ள திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கிய அரசாங்க அதிபர், விவசாயிகளின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.  இக்கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த விவசாய

திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் Read More »

ரூ. 20,000 இலஞ்ச ஊழல் வழக்கு: சாய்ந்தமருது பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு ஆகஸ்ட் 28 வரை விளக்கமறியல்

பாறுக் ஷிஹான் ரூ. 20,000 இலஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு ஆகஸ்ட் 28 வரை விளக்கமறியல் ஹெரோயின் போதைப்பொருள் வழக்கில் சந்தேகநபருக்குச் சாதகமாகச் செயற்படுவதற்காக ரூ. 20,000 இலஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் அதிகாரிகளையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்ட சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின்

ரூ. 20,000 இலஞ்ச ஊழல் வழக்கு: சாய்ந்தமருது பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு ஆகஸ்ட் 28 வரை விளக்கமறியல் Read More »

அரச அதிகாரியைக் காதலிப்பதாகக் கூறித் துஷ்பிரயோகம்: முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வுக்குச் சிக்கல்-

பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறித் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ் வழக்கு அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த காலத்தில் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராக சக்கி அதாவுல்லாஹ் செயற்பட்டு வந்த

அரச அதிகாரியைக் காதலிப்பதாகக் கூறித் துஷ்பிரயோகம்: முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வுக்குச் சிக்கல்- Read More »

திருகோணமலை மாவட்ட தபால் சேவையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் இம்ரான் எம் பி நாடாளுமன்றத்தில் முன்வைத்த கோரிக்கை 

திருகோணமலை மாவட்டத்தில் கள விஜயத்தின் போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நேரடியாக அவதானிக்கப்பட்ட தபால் சேவை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இன்று(18) பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். . ஊழியர் பற்றாக்குறை மாவட்டத்தில் உள்ள பல தபால் அலுவலகங்களில், அப்பகுதியின் அஞ்சல் அட்டைகளின் எண்ணிக்கைக்கும்  சேவை வழங்கும் இடத்திற்கு ஏற்ப போதுமான தபால்காரர்கள் மற்றும் அஞ்சல் விநியோகப் பணியாளர்கள் குறைவு. இதனால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அஞ்சல் சேவையில் தாமதம் ஏற்படுகின்றது. எனவே, ஒவ்வொரு தபால்

திருகோணமலை மாவட்ட தபால் சேவையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் இம்ரான் எம் பி நாடாளுமன்றத்தில் முன்வைத்த கோரிக்கை  Read More »

*கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு பிரதிநிதிகள் ஊடான சந்திப்பு 

ஹஸ்பர் ஏ ஹலீம்  கனடா எல்லைப் பாதுகாப்பு முகமையின் (CBSA) இணைப்பு அதிகாரி திருமதி கசுமி குபோ (Kazumi Kubo) மற்றும் செயல்பாட்டு இணைப்பு உதவியாளர் திருமதி நதீகா சமரக்கொடி ஆகியோர் அடங்கிய தூதுக்குழுவினர் இன்று (18) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது, அண்மைக் காலங்களில் கனடாவிற்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோத புலம்பெயர்வுகளினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும், அவற்றை எதிர்காலத்தில் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் மாவட்ட

*கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு பிரதிநிதிகள் ஊடான சந்திப்பு  Read More »

படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க துறவியான அருட்பணி ஹெர்பர்ட் தன் ஆட்டுக்குட்டிக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்.  ஹெர்பர்ட் அடிகளாரின் 36 வது நினைவேந்தல்  

( (கனகராஜா சரவணன்) படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க துறவியான அருட்பணி ஹெர்பர்ட் அடிகள்  ஒரு நல்லாயனாய் தன் ஆட்டுக்குட்டிக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த அந்த உன்னதமான தியாகம், மனிதநேயத்தின் மிக உயர்ந்த சிகரமாகும். என சென் மிக்கேல் தேசிய பாடசாலை பழையமாணவர்களின் இணைப்பாளர் ஜ.ஜே. சில்வெஸ்டர் தெரிவித்தார். மட்டக்களப்பில்  ஏறாவூர் பகுதியில் வைத்து   1990 ஆம் ஆண்டு; வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அமெரிக்க துறவியான அருட்பணி ஹெர்பர்ட் அடிகளாரின் 36 வது நினைவேந்தல் மட்டக்களப்பு சென் மிக்கேல்

படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க துறவியான அருட்பணி ஹெர்பர்ட் தன் ஆட்டுக்குட்டிக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்.  ஹெர்பர்ட் அடிகளாரின் 36 வது நினைவேந்தல்   Read More »

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடம் நடத்தும் எட்டாவது ஆய்வு மகாநாடு 

கிழக்குப்பல்கலைக் கழகத்தின் கலை கலாசார பீடம் நடத்தும் எட்டாவது ஆய்வு மகாநாடு   செவ்வாய்கிழமை (18) கிழக்கு பல்கலைக்கழகத்தின் நல்லையா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் க. சுரேஷ்  தலைமையில் நடைபெற்ற ஆய்வு மகாநாட்டின் ஆரம்ப விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்குப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ப. பிரதீபன்  கலந்து சிறப்பித்தார். ஆய்வு மகாநாட்டின் ஆதாரசுருதி உரையினை இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா  வழங்ஙியிருந்தார்.  இந்த

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடம் நடத்தும் எட்டாவது ஆய்வு மகாநாடு  Read More »