கிழக்குப்பல்கலைக் கழகத்தின் கலை கலாசார பீடம் நடத்தும் எட்டாவது ஆய்வு மகாநாடு செவ்வாய்கிழமை (18) கிழக்கு பல்கலைக்கழகத்தின் நல்லையா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் க. சுரேஷ் தலைமையில் நடைபெற்ற ஆய்வு மகாநாட்டின் ஆரம்ப விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்குப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ப. பிரதீபன் கலந்து சிறப்பித்தார்.
ஆய்வு மகாநாட்டின் ஆதாரசுருதி உரையினை இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா வழங்ஙியிருந்தார்.
இந்த ஆய்வு மகாநாட்டில் மொத்தமாக 62 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post Views: 41




