July 18, 2026

கல்முனை அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு 04 புதிய பயிற்சி மருத்துவர்கள் நியமனம்

பாறுக் ஷிஹான்நாட்டின் பொதுச் சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்  கல்முனை அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு பயிற்சி மருத்துவர்கள்   இன்று சனிக்கிழமை தங்களது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். கடமைகளைப் பொறுப்பேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வின் போதுஇ புதிய மருத்துவர்களுக்கான நியமனக் கடிதங்களை வைத்தியசாலையின் அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எல்.எம்.  றிபாஸ் வழங்கி வைத்தார். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பயிற்சி மருத்துவர்களுக்கான இரண்டு நாள் புத்தாக்குமுகப் பயிற்சி  தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிகளைத் தொடர்ந்து  அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட […]

கல்முனை அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு 04 புதிய பயிற்சி மருத்துவர்கள் நியமனம் Read More »

போதைப்பொருள் சுற்றிவளைப்பு-ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

பாறுக் ஷிஹான்   நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்  3,820 மில்லிகிராம்  ‘ஐஸ்’   போதைப்பொருளுடன் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்திற்கு அமைய, பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு ஏற்ப நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்புகளின் ஒரு கட்டமாகவே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.ஏ.பி.வி.  கஸ்தூரி ஆராய்ச்சி  வழிகாட்டலிலும்  கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.

போதைப்பொருள் சுற்றிவளைப்பு-ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது Read More »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 1 கோடிக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: பயணிகள் முனையத்தில் பரபரப்பு!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை முனையத்தில், உரிமையாளர் எவருமின்றி கைவிடப்பட்டிருந்த 1 கோடியே 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் நேற்று (17.07.2026) அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர். விமான நிலைய வருகை முனையத்திலுள்ள லக்கேஜ் பெல்ட் (Luggage Belt) பகுதிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் கைவிடப்பட்டிருந்த 4 பயணப் பொதிகளை (Suitcases) சோதனையிட்ட போதே இந்த பெருந்தொகையான சிகரெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. துபாய் விமானம் மூலம் கடத்தல்?

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 1 கோடிக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: பயணிகள் முனையத்தில் பரபரப்பு! Read More »

சர்வதேச தபால் பொதிகள் மூலம் போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு: சுங்கத்துறை விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை!

இலங்கைக்கு சர்வதேச தபால் பொதிகள் (Courier Services) ஊடாக போதைப்பொருட்கள் கடத்தப்படும் ஓர் ஆபத்தான போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத்துறை தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகாரிகளின் சோதனைகள் மற்றும் கண்காணிப்புகளில் இருந்து தப்புவதற்காக, கடத்தல்காரர்கள் சிறிய அளவிலான தபால் பொதிகளைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூன் மாத அதிரடி சோதனைகள்: கடந்த ஜூன் மாதம் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து சுங்கத் துறை ஊடகப்

சர்வதேச தபால் பொதிகள் மூலம் போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு: சுங்கத்துறை விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை! Read More »

இலங்கையில் புகைப்பிடித்தலால் நாளாந்தம் 50 மரணங்கள்: பொருளாதாரத்திற்கும் பாரிய அச்சுறுத்தல் என எச்சரிக்கை!

இலங்கையில் புகைப்பிடித்தல் பாவனை காரணமாக நாளாந்தம் சுமார் 50 மனித உயிரிழப்புகள் ஏற்படுவதுடன், இதனால் நாட்டின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக பேராசிரியர் எல்.எல். அமில இசுரு எச்சரித்துள்ளார். நேர்காணல் ஒன்றின் போது கருத்து வெளியிட்ட அவர், இந்த அபாயகரமான நிலைமை குறித்து பல அதிர்ச்சி தரும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். புகையிலை மூலம் அரசாங்கத்திற்குக் கிடைக்கும் வரி வருமானத்தை விட, அதனால் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சைக்காக அரசாங்கம் மூன்று மடங்கு அதிக நிதியை மக்களின் வரிப்பணத்தில்

இலங்கையில் புகைப்பிடித்தலால் நாளாந்தம் 50 மரணங்கள்: பொருளாதாரத்திற்கும் பாரிய அச்சுறுத்தல் என எச்சரிக்கை! Read More »

உலக எரிசக்தி சந்தை: எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலையில் அதிரடி மாற்றம்!

உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகளில் புதிய மாற்றங்கள் பதிவாகியுள்ளன. உலக அரசியல் நகர்வுகள் மற்றும் விநியோகச் சங்கிலித் தடங்கல்களுக்கு மத்தியில் இந்த விலை மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்கள், பிராந்திய விநியோகச் சங்கிலி (Supply Chain) பாதிப்புகள் மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் மாற்றங்கள் ஆகியவையே இந்த திடீர் விலை மாற்றங்களுக்கு முதன்மைக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.

உலக எரிசக்தி சந்தை: எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலையில் அதிரடி மாற்றம்! Read More »