Filter posts by category

உள்ளூர் செய்திகள்

மட்டு கல்லடியில் பிரபல கசிப்பு பெண் வியாபரி 105 போத்ல் கசிப்புடன் கைது

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு கல்லடியில் நீண்டகாலமாக கசிப்பு வியாபாரத்தின் பிரதான நிலையமாக இயங்கி கசிப்பு விற்பனை நிலையத்தை நேற்று புதன்கிழமை (8) மாலையில் முற்றுகையிட்ட பொலிசார் பெயர் போன கசிப்பு வியாபரியான பெண் ஒருவரை 105 போத்தல் கசிப்புடன் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்தினவின் ஆலோசனையில் மட்டு தலைமையப பொலிஸ் நிலைய பொறுப்பதரிகாரி பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் […]

மட்டு கல்லடியில் பிரபல கசிப்பு பெண் வியாபரி 105 போத்ல் கசிப்புடன் கைது Read More »

மட்டக்களப்புக்கு யாழ், கொழும்பில் இருந்து தனியாக பிரயபணிப்பவர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் எதையும் வாங்கி சாப்பிடவேண்டாம் — கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.மேனன்

(கனகராஜா சரவணன்) யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு அம்பாறைக்கு தனியாக பஸ்வண்டிகளில் பிரயாணிக்கும் பிரயாணிகளுக்கு மயக்கமருந்து கலந்து லெமன்பெப் பஸ்கட் வழங்கி கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றது எனவே தனியாக பிரயாணிப்பவர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் பிஸ்கட வாங்கி சாப்பிட வேண்டாம் என்பதுடன் பொதுமக்கள் கொள்ளையர்களிடம் அவதானமாக இருக்குமாறு கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்தார். கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு பிரயாணிக்கும் பஸ் வண்டிகளில் பிரயாணிகள்

மட்டக்களப்புக்கு யாழ், கொழும்பில் இருந்து தனியாக பிரயபணிப்பவர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் எதையும் வாங்கி சாப்பிடவேண்டாம் — கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.மேனன் Read More »

கல்முனை பொது சந்தை பகுதியில் பரிசோதனை

பாறுக் ஷிஹான் எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஷகிலா இஸ்ஸதீன் நெறிப்படுத்தலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஸஹ்ரா சாரப்தீன் வழிகாட்டலில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜே. எம். நிஜாமுதீன் தலைமையில்கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கல்முனை பொது சந்தை பகுதியில் உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள் பொது சுகாதார பரிசோதகர்களினால் இன்று (08) பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.இதன்போது மனித நுகர்வுக்குப்

கல்முனை பொது சந்தை பகுதியில் பரிசோதனை Read More »

மங்களகம பகுதியில் எருமை மாட்டை சுட்டுக் கொன்ற இரு இளைஞர்கள் கைது – துப்பாக்கி மீட்பு.

(கனகராசா சரவணன்)மங்களகம பிரதேசத்தில் எருமை மாடு ஒன்றை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (8) கைது செய்ததுடன், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றையும் மீட்டுள்ளதாக மங்களகம பொலிசார் தெரிவித்தனர்.மட்டக்களப்பு மாவட்ட எல்லைக் கிராமமான மங்களகம பொலிஸ் பிரிவில் உள்ள பக்கியல்ல சின்னவத்தையைச் சேர்ந்த செல்லத்துரை கிருஷ்ணன் என்பவரின் பெண் எருமை மாடு ஒன்றை, சம்பவ தினமான நேற்று அதிகாலையில் மங்களகம 25வது மைல்கல் பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக

மங்களகம பகுதியில் எருமை மாட்டை சுட்டுக் கொன்ற இரு இளைஞர்கள் கைது – துப்பாக்கி மீட்பு. Read More »

யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு(photoes)

பாறுக் ஷிஹான் தனது வீட்டு முற்றத்தில் வைத்து யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீத்புரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் புதன்கிழமை (8) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன் யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் மதியம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை பகுதி மஜீத்புரம் மல்வத்தை-03 முகவரியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தயான 48 வயது

யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு(photoes) Read More »

அனுரகுமார திசாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் வடக்கு கிழக்கிலே கூடுதலான காணிகளை நாங்கள் விடுவித்து இருக்கின்றோம் – பிரபு எம்.பி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்றுதன் பின்னர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் ஒட்டுமொத்தமாக வடக்கு கிழக்கிலே கூடுதலான காணிகளை நாங்கள் விடுவித்து இருக்கின்றோம். வடக்கு கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், போன்ற பல பிரதேசங்களிலும் இராணுவத்திடம் இருந்த காணிகள் அதேபோன்று மட்டக்களப்பிலும், அம்பாறையில், இருக்கின்ற காணிகளையும் தொடர்ச்சியாக நாம் விடுவித்து வருகின்றோம். என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்

அனுரகுமார திசாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் வடக்கு கிழக்கிலே கூடுதலான காணிகளை நாங்கள் விடுவித்து இருக்கின்றோம் – பிரபு எம்.பி Read More »

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்னம் காரணமாக விவசாய நடவடிக்கைகள் பாதிப்பு.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் தொடர்ச்சியான அதிக வெப்பம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது விவசாய நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் கால்நடையாக செல்வதை தவிர்த்து முச்சக்கர வண்டிகளில் பயணிப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் விவசாய நடவடிக்கைகளின்போது பயன் தரும் மா, மற்றும் தென்னை, வெற்றிலை, செய்கை இலைக்கறி, வகைகள் போன்றவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், கால்நடைகளுக்கு வேண்டிய புற்றரைகளும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்னம் காரணமாக விவசாய நடவடிக்கைகள் பாதிப்பு. Read More »

டீசல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த சந்தேக நபர் தொடர்பில் விசாரணை.

பாறுக் ஷிஹான் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி டீசல் எரிபொருட்கள் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வீடொன்றுடன் இணைந்த களஞ்சியசாலையில் டீசல் எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக இன்று மாலை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி வழிகாட்டலில் அப்பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர்களான கே.எல்.எம் முஸ்தபா அனுர குமார

டீசல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த சந்தேக நபர் தொடர்பில் விசாரணை. Read More »

சாதனை படைத்த செங்கலடி மத்திய கல்லூரி: பல்கலைக்கழகம் தெரிவான 45 மாணவர்களுக்கு வரவேற்பு!

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலையத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி பாடசாலையில் இருந்து இம்முறை உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 45 மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்தச் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்வு இன்று காலை மிக விமரிசையாக நடைபெற்றது.இன்று காலை செங்கலடி சந்தி பிரதான வீதியில் ஆரம்பமான இந்த வரவேற்பு ஊர்வலம், அப்பகுதியையே விழாக்கோலம் பூணச் செய்தது. பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிய 45 மாணவர்களுக்கும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டனர். அதனைத்

சாதனை படைத்த செங்கலடி மத்திய கல்லூரி: பல்கலைக்கழகம் தெரிவான 45 மாணவர்களுக்கு வரவேற்பு! Read More »

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடு ஆராதனைகள்.

இயேசுபிரானின் தவக்காலத்தின் இறுதி விசேட தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை(05.04.2026) காலை விசேட ஆராதனைகள் இடம்பெற்றது. மட்டக்களப்பு பிள்ளையாரடியில் உள்ள சீயோன் தேவாலயத்தில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடு ஆராதனைகள் ஆலய பிரதம போதகர் ரோஷான் மகேசன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது கடந்த 2019 ஆம் ஆண்டு இதே தினத்தில் குண்டு வெடிப்பின் போது உயிரிழந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காகவும் இதன் போது பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் விசேட நினைவஞ்சலி ஆராதனைகள் இடம்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடு ஆராதனைகள். Read More »