September 4, 2026

திருகோணமலையில் வீழ்ச்சியடைந்த நெல் விலை: பெரும் நஷ்டத்தில் விவசாயிகள்!

திருகோணமலை மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நெல்லுக்குப் போதிய விலை கிடைக்காமையால் விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். தோப்பூர், கிளிவெட்டி, வெருகல், மூதூர், சேருவில மற்றும் சம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது அறுவடை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இருப்பினும், கடந்த போகத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை நெல் மிகவும் குறைந்த விலையிலேயே கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். கல்லாறு மற்றும் கிளிவெட்டி பகுதிகளில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நெல் களஞ்சியசாலைகள் காணப்படுகின்ற

திருகோணமலையில் வீழ்ச்சியடைந்த நெல் விலை: பெரும் நஷ்டத்தில் விவசாயிகள்! Read More »

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு–

 (கனகராஜா சரவணன்) மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அந்த பகுதி மீனவர் சங்க தலைவர் உட்பட இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் ஒருவர் நீந்தி கரை சேர்ந்துள்ள சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (4) பிற்பகலில் இடம்பெற்றுள்ளதாகவும் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது டன் ஒருவரின் சடலம் காணாமல் போயுள்ளதாக  காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். கிரான்குளம் செல்லத்தம்பி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய மீனவர் சங்க தலைவரான நகேந்திரன் என

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு– Read More »

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாட்டதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (செப்டம்பர் 04) காலை முன்னெடுக்கப்பட்ட விசாரணை ஒன்று தொடர்பான வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அவர் முன்னிலையானார். சுமார் 5 மணிநேரத்திற்கும் மேலாக அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது Read More »

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாட்டதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பான வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அவர் முன்னிலையான நிலையிலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ மண்டபத்திற்கு நாற்காலிகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறைந்த விலையைக் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்காமல், தமக்கு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது Read More »

கொழும்பில் லங்கா மெட்ரோ ட்ரான்ஸிட் சொகுசு பஸ் சேவை ஆரம்பம்: 7 முக்கிய வழித்தடங்களில் 100 புதிய பஸ்கள் இயக்கம்!

கொழும்பு: மேல் மாகாண பொதுப் போக்குவரத்துத் துறையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், புதிதாக அமைக்கப்பட்ட ‘லங்கா மெட்ரோ ட்ரான்ஸிட்’ (LMT) நிறுவனத்தின் நவீன சொகுசு பஸ் சேவைகள் செப்டம்பர் 04 ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாகத் தங்கள் இயக்கத்தைத் தொடங்குகின்றன. இச்சேவைகளுக்காகத் தலங்கம மெட்ரோ டிப்போவிற்கு ஒதுக்கப்பட்ட முதற்கட்ட 20 தாழ்தள (Low Floor) சொகுசு பஸ்கள் பேலியகொட பஸ் முனையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 100 புதிய பஸ்களைப் பயன்படுத்தி, கொழும்பு மற்றும் அதனைச்

கொழும்பில் லங்கா மெட்ரோ ட்ரான்ஸிட் சொகுசு பஸ் சேவை ஆரம்பம்: 7 முக்கிய வழித்தடங்களில் 100 புதிய பஸ்கள் இயக்கம்! Read More »

வெல்லாவெளி பாலையடிவட்டையில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது  சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு

(கனகராஜா சரவணன்) நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும்  நாவல் பழத்தை   உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று வியாழக்கிழமை (03) மாலை மட்டு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பாலையடிவட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 11 வயதுடைய 37-ஆம் கிராமம் நவகிரி வித்யாலயத்தில் 6ம் ஆண்டில் கல்வி  கற்று வந்த ரொ.சஞ்சீவ் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனின்

வெல்லாவெளி பாலையடிவட்டையில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது  சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு Read More »

கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தின் மூன்றாம் நாளில் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்த இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர்

A.H.HASFAR HASFAR இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் வைபே டி போயர் (Wiebe de Boer) கிழக்கு மாகாணத்திற்கான தனது விஜயத்தின் மூன்றாம் நாளில் திருகோணமலை மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகளை திருகோணமலையில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து சந்தித்தார். இதன்போது, பிரதேச மக்களின் சமூக நிலைமைகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் தூதுவர் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, திருகோணமலை சீனக்குடாவில் அமைந்துள்ள லங்கா IOC எண்ணெய் சேமிப்பு நிலையத்துக்கு விஜயம் செய்த அவர், அங்கு அன்புடன் வரவேற்கப்பட்டதுடன், தனது விஜயத்தை

கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தின் மூன்றாம் நாளில் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்த இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Read More »

இளநீரால் ஆரோக்கியத்துடன் பொருளாதாரமும் வளரும் பிரதி அமைச்சர் பிரதீப் தெரிவிப்பு

பெருந்தோட்ட அமைச்சின் ஊடாக 500 தேயிலை கிராமங்கள் வேலைத்திட்டம்,. பனை அபிவிருத்தி திட்டங்கள் என்பன வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தென்னை முக்கோண அபிவிருத்தியைப் போலவே இளநீர் கிராமம் -250 செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன அவர்கள் மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையிலும் (02.09.2026) குருநாகல்-மஹாயாய பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட

இளநீரால் ஆரோக்கியத்துடன் பொருளாதாரமும் வளரும் பிரதி அமைச்சர் பிரதீப் தெரிவிப்பு Read More »