எனது நாட்டில் கருத்துக்கள் ஒரு பக்கமாகவும் செயற்பாடுகள் இன்னொரு பக்கமாகவும் இருக்கின்றனவா? கேள்வி எழுப்பகின்றார் ஸ்ரீநேசன் எம்.பி.
எனது நாட்டில் கருத்துக்கள் ஒரு பக்கமாகவும் செயற்பாடுகள் இன்னொரு பக்கமாகவும் இருக்கின்றனவா? என சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றன. ஏனெனில் பொதுவாக பார்க்கின்ற பொழுது சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப கருத்துக்கள் இருக்கின்றன. ஒரே நாடு ஒரே சட்டம் என சொல்லுகின்றார்கள். சட்டவாட்சி நடைபெறுகின்றது சட்டத்தின் முன்னிலையில் யாவரும் சமம் என்ற கருத்துக்கள் ஒரு பக்கமாக சொல்லப்பட்டு கொண்டிருக்கின்றன. அவை சில நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதேவேளை எமது அரசியல் யாப்பை பொறுத்தவரையில் அரச மதம் பௌத்த மதம் என








