வவுணதீவில் விசேட அதிரடிப்படை ஜீப் வண்டி – சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு: விசேட அதிரடிப்படை சாரதி கைது
(கனகராஜா சரவணன்) வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள பருத்திச்சேனை சந்தியில், சைக்கிளுடன் விசேட அதிரடிப்படையின் ஜீப் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில், சைக்கிளில் பிரயாணித்த 67 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து தொடர்பில் விசேட அதிரடிப்படை சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது. கன்னங்குடா, புதுமண்டபத்தடியைச் சேர்ந்த 67 வயதுடைய அப்புஹாமி கிருஷ்ணபிள்ளை (அல்லது கிருஷ்ணபாலன்) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கல்லடி விசேட அதிரடிப்படை முகாமில் […]



