• Home
  • உள்ளூர் செய்திகள்
  • மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட தேசிய தூய்மை தினம்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட தேசிய தூய்மை தினம்.

“ஒற்றுமையாக ஒன்றிணைவோம் – தூய்மையான இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்  “அத்தம” தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வானது சனிக்கிழமை (08.08.2026)  குருக்கள்மடம் ஐயனார் கோயில் முன்றலில் பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் காலை இடம்பெற்றது.

“கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் “தூய்மையான தேசத்திற்கான தேசிய மக்கள் பணி” எனும் தொனிப் பொருளை முன்னிறுத்தி தன்னார்வ மக்கள் பங்கேற்பின் முலம் தனியார் மற்றும் மக்கள் கூட்டாண்மை எண்ணக்கருவின் அடிப்படையில் ‘அத்தம” தேசிய தூய்மை தின  நிகழ்ச்சி திட்டமானது நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன்போது  குருக்கள்மடம் ஐயனார் கோயிலில் இருந்து செட்டிபாளையம் வரையிலான பிரதான வீதியைத் துப்பரவு செய்யும் பணி இடம்பெற்றது.

இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் பிரபாகரன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், முப்படையினர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share the Post: