காணி உரிமைப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான விழிப்புணர்வு அமர்வு தம்பலகாமத்தில் நடைபெற்றது
ஹஸ்பர் ஏ.எச்- திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தின் (PSC) அனுசரணையில், தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் காணி உறுதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள் மற்றும் சட்ட ஏற்பாடுகள் தொடர்பான பொதுமக்கள் விழிப்புணர்வு அமர்வு நேற்று (07)தம்பலகாமம், கல்மெட்டியாவ பகுதியில் வெற்றிகரமாக நடைபெற்றது. மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம்.டி.எம். பாரிஸ் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில், தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே. சதிசேகரன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வின் தலைமை வளவாளராகத் தம்பலகாமம் பிரதேச செயலகக் […]






