August 23, 2026

கடும் வறட்சியால் 72,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு: நீர் தட்டுப்பாட்டால் விவசாயமும் ஸ்தம்பிதம்!

நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சியான வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், விவசாய நடவடிக்கைகளும் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன. அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அண்மைக்கால அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 23,048 குடும்பங்களைச் சேர்ந்த 72,153 பேருக்குத் தாங்கி ஊர்திகள் (Bowser) மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. கடும் வெப்பம் காரணமாக அனுராதபுரம் – நாச்சதூவ குளம் முழுமையாக வற்றிப்போயுள்ளது.

கடும் வறட்சியால் 72,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு: நீர் தட்டுப்பாட்டால் விவசாயமும் ஸ்தம்பிதம்! Read More »

எல் நினோ கால நிலையின் தாக்கம் குளத்தின் நீர்மட்டம் குறைந்து வரட்சியான நிலை 

ஹஸ்பர் ஏ ஹலீம் – தொடர்ச்சியாக நிலவும் கடும் வரட்சி மற்றும் எல்நினோ காலநிலை தாக்கத்தின் காரணமாக திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள சேனாவெளி குளம் நீர் சட்டத்தின் அளவு வற்றி வரண்டு காணப்படுகிறது. நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் குளத்தின் பெரும்பகுதி தற்போது வறண்ட நிலையில் காணப்படுவதுடன், இதனை நம்பியுள்ள விவசாய நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குளத்தின் நீரை நம்பி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் எதிர்வரும் காலங்களில் நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும்

எல் நினோ கால நிலையின் தாக்கம் குளத்தின் நீர்மட்டம் குறைந்து வரட்சியான நிலை  Read More »

திருகோணமலையில் வீதி சமிக்ஞை விளக்குகள் இல்லாமை – பொதுமக்கள் கவலை

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்ன மோகன் தெரிவிப்பு.! (ஹஸ்பர் ஏ ஹலீம் )  திருகோணமலை நகரில் வீதி சமிக்ஞை (Traffic Signal) விளக்குகள் இல்லாத நிலை காரணமாக வாகன விபத்துகள் அதிகரித்து வருவதாக வீதிப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்னமோகன் தெரிவித்தார்.  சனிக்கிழமை (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும்

திருகோணமலையில் வீதி சமிக்ஞை விளக்குகள் இல்லாமை – பொதுமக்கள் கவலை Read More »

மட்டு கோட்டைக்கல்லாற்றில் வீதியோரம் நின்ற சிறுவர்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் பலி 4 பேர் படுகாயம்

(கனகராஜா சரவணன்) களுவாஞ்சிகுடி கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகாமையில்  களுவாஞ்சிக்குடியை நோக்கி பிரயாணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை கடக்க வீதி ஓரமாக நின்ற சிறுவர்கள் மீது மோதி விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (22) இரவு இடம் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கோடைக் ல்லாற்றைச் சேர்ந்த 17 வயதுடைய ஜெகநாதன் கிஷோர் சிறுவனே இவ்வாறு

மட்டு கோட்டைக்கல்லாற்றில் வீதியோரம் நின்ற சிறுவர்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் பலி 4 பேர் படுகாயம் Read More »

செங்கலடியில் சுகாதார நடைமுறைகளை மீறிய இரு உணவகங்கள் சீல் வைப்பு ஐந்து உணவகங்களுக்கு அபராதம்

மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் உணவு பாதுகாப்பு நடவடிக்கை தொடரபாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தீவிரமா நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கீர்திகா மதனலகன் (Dr. Keerthika mathanalakan) தலைமையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் சின்னத்தம்பி திருனவன், பொதுச் சுகாதார பரிசோதகர்களான எஸ்.கிஷாந்தராஜா, செ. தவவேந்திரராஜா, சோ.அமுதமலன் இணைந்து உணவு கையாளும நிலையங்களில் மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையில் சுகாதார நடைமுறைகளை

செங்கலடியில் சுகாதார நடைமுறைகளை மீறிய இரு உணவகங்கள் சீல் வைப்பு ஐந்து உணவகங்களுக்கு அபராதம் Read More »

சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலய முன்றலில் 1990 காணாமல் ஆக்கப்பட்டோரின் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது

மட்டக்களப்பு சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய வளாகத்தில் 1990ஆம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்த நலன்புரி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு நேற்று 22.08.2026 சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய முன்றலில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ​இந் நிகழ்வில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். ​நிகழ்வின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஞாபகார்த்தமாகப் பொதுச் சுடர்

சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலய முன்றலில் 1990 காணாமல் ஆக்கப்பட்டோரின் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது Read More »

பெரிய குளம் பாரதி மகளிர் விளையாட்டு கழகத்திற்கு ஆதரவு – திரு. குமார் ஜெயகுமரன்

ஹஸ்பர் ஏ ஹலீம் – திருகோணமலை மாவட்ட,பெரிய குளம் பாரதி மகளிர் விளையாட்டு கழகத்திற்கு அனுசரணையாளராக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என குமார் ஜெயக்குமாரன் பவுண்டேசனின் ஸ்தாபகர் திரு. குமார் ஜெயகுமரன் தெரிவித்துள்ளார். குறித்த கழகத்திற்கு (22) விளையாட்டு சீருடைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் இளம் பெண்கள் விளையாட்டுத் துறையில் முன்னேறுவதற்கு தேவையான வாய்ப்புகளையும் ஊக்கத்தையும் வழங்குவது எமது சமூகத்தின் முக்கிய பொறுப்பாகும். பெண்கள் பல்வேறு வகையான

பெரிய குளம் பாரதி மகளிர் விளையாட்டு கழகத்திற்கு ஆதரவு – திரு. குமார் ஜெயகுமரன் Read More »

நாடாளுமன்ற உறுப்பினர் பி ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஈரோஸ் கட்சி தலைவர் இரா. பிரபாகரன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு–

 (க.சரவணன்) மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா கடந்த காலத்தில் ஓட்டமாவடி காளி கோவிலை இடித்தமை, நீதவானை இடமாற்றியது, தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானுடன் தொடர்பில் இருந்தது மற்றும் பல ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை சூறையாடியுள்ளார் அதற்கு  எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை (22) முறைப்பாடு செய்துள்ளதாக ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார். ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் .இன்று சனிக்கிழமை (22) மட்டு  தலைமையக

நாடாளுமன்ற உறுப்பினர் பி ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஈரோஸ் கட்சி தலைவர் இரா. பிரபாகரன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு– Read More »

மன்னார் சின்னக்கடை குப்பை சேகரிப்பு பகுதியில் பாரிய தீ விபத்து!

மன்னார் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள சின்னக்கடை குப்பை சேகரிப்பு வளாகத்தில் இன்று பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இத்தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்து காணப்பட்டதோடு, அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கும் புகை பரவியதால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். சம்பவ இடத்திற்கு விரைந்த நகர சபைப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்புப் படையினர், அப்பகுதி மக்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீ

மன்னார் சின்னக்கடை குப்பை சேகரிப்பு பகுதியில் பாரிய தீ விபத்து! Read More »

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக மீளப்பெறமுடியாத சமஷ்டி தீர்வை தாருங்கள் _வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு 

ஹஸ்பர் ஏ ஹலீம் – தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக சமஷ்டி தீர்வை பெற்றுத்தாருங்கள் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர். இலங்கையின் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி-வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினர் (22) திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று இடம் பெற்றன. இதில் சிவில் சமூக பெண் பிரதிநிதிகள், உள்ளூர் அரசியல்வாதிகள்,சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். நிலையான

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக மீளப்பெறமுடியாத சமஷ்டி தீர்வை தாருங்கள் _வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு  Read More »