பகல் கனவு காணாது உங்களது கட்சிகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள் – அமைச்சரவை பேச்சாளர் சஜித், நாமலுக்கு அறிவுரை
அரசாங்கத்துக்குள் எந்த முரண்பாடுகளோ பிளவுகளோ இல்லை. அது எதிர்க்கட்சிகளின் பகல் கனவாகும். நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அமைச்சரவை ஒற்றுமையுடன் ஒருமித்து செயற்பட்டு வருகிறது. எனவே சஜித் பிரேமதாசவும் நாமல் ராஜபக்ஷவும் அவர்களது கட்சிகளைப் பாதுகாத்துக் கொள்வதில் அவதானம் செலுத்துவதே பொறுத்தமானது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (12) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் […]


